×
 

ராஜமாதா மனதில் இப்படி ஒரு வலியா.. சினிமாவுக்கு வர காரணமே இதுதானா..! ரம்யா கிருஷ்ணன் ஓபன் டாக்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன், சினிமாவுக்கு வர காரணமே இதுதான் என ஓபனாக கூறி இருக்கிறார்.

திரை உலகில் பெண்களுக்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் என்றால் அது நடிகை ரம்யா கிருஷ்ணன் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. நாற்பது ஆண்டுகளாக திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களை செய்து, ரசிகர்களின் இதயங்களில் ஆழமாக பதிந்துள்ளார். இப்போது, தன் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமான முடிவை பற்றி அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

சமீபத்தில் தெலுங்கில் ஒளிபரப்பாகும் ஒரு பிரபல ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட ரம்யா கிருஷ்ணன், தன் சினிமா பயணத்தின் ஆரம்ப காலத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். “நான் சினிமாவுக்கு வந்தது ஒரு கனவு காரணமாக அல்ல. எனக்கு படிப்பு என்றால் பயம். தேர்வு எழுதுவதற்கே ஒரு பெரும் தளர்ச்சி. அதனால் தான் இந்த துறையில் காலடி வைத்தேன்” என்று அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். இப்படி இருக்க ரம்யா கிருஷ்ணன் சிறுவயதிலேயே நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்தாலும், அவர் நடிக்கத் தொடங்கிய போது தொடர்ந்து பல படங்கள் தோல்வியடைந்தன. அதுகுறித்து அவர் கூறுகையில், “என் ஆரம்ப கால படங்கள் பெரும்பாலும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகவில்லை. பெற்றோர்கள் ‘இது உனக்கு சரியான பாதை இல்லை, மீண்டும் படி’ என்று அறிவுரை சொன்னார்கள். ஆனால் நான் ‘படிக்க மாட்டேன், நான் இதில் தான் வெற்றி காண்பேன்’ என்று உறுதி கொண்டேன்” என்றார்.

அவரது அந்த உறுதி தான் பின்னர் அவரை தென்னிந்திய திரையுலகின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக மாற்றியது. பின் ரம்யா கிருஷ்ணனின் சினிமா பயணத்தில் முதல் பெரிய வெற்றி கிடைக்க ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் அவர் அதற்குள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. “எல்லோரும் எனக்கு ‘இதில் நீ நீண்ட நாள் நிலைக்க மாட்டாய்’ என்றார்கள். ஆனால் அந்த வார்த்தைகளே எனக்கு ஊக்கம் தந்தது. ஒவ்வொரு தோல்வியும் எனக்கு ஒரு புதிய பாடமாக இருந்தது” என்று அவர் கூறினார். குறிப்பாக ரம்யா கிருஷ்ணனின் வாழ்க்கையை மாற்றிய முக்கியமான மைல்கற்கள் ‘படையப்பா’ மற்றும் ‘பாகுபலி’. ‘படையப்பா’ படத்தில் அவர் நடித்த நீலாம்பரி என்ற வில்லி கதாபாத்திரம் இன்று கூட தமிழ் சினிமா ரசிகர்களால் பேசப்படுகிறது. அந்த ஒரு படம் மட்டுமே அவரை ‘லெஜண்ட்’ நிலைக்கு கொண்டு சென்றது என்று கூறலாம்.

இதையும் படிங்க: திருப்பதியில் 'AK'..!! தல.. தல.. என கத்திய ரசிகர்கள்..!! உடனே அவர் செய்த தரமான செயல்..!!

பின்னர், ‘பாகுபலி’ படத்தில் அவர் நடித்த சிவகாமி தேவி கதாபாத்திரம் உலகளாவிய புகழைப் பெற்றது. அந்த படத்தில் அவர் வெளிப்படுத்திய தாய்மையின் உணர்ச்சி, அரச மரியாதை, மற்றும் கட்டுப்பாட்டான குணம் என அனைத்தும் திரையுலகில் அவருக்கு புதிய அடையாளம் உருவாக்கியது. இப்பொழுது 55 வயதிலும், ரம்யா கிருஷ்ணன் இன்னும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நடித்து வருகிறார். புதிய கதாபாத்திரங்களை ஏற்கும் ஆர்வம், புதுமையாக வெளிப்படுத்தும் திறமை ஆகியவை அவரை மற்ற நடிகைகளிடமிருந்து வேறுபடுத்துகின்றன. தற்போது அவர் பல திரைப்படங்களிலும், ஓடிடி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்த ரியாலிட்டி ஷோவில் அவர் கூறிய உண்மை சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திரையுலகில் பெண்கள் நிலைக்க முடியாது என்ற பாரம்பரிய எண்ணத்தை உடைத்தவர்களில் ரம்யா கிருஷ்ணன் முக்கியமானவர்.

இவர் தன்னம்பிக்கையுடன் தன் பாதையை தானே உருவாக்கி, இன்னும் பல இளம் நடிகைகளுக்கு ஒரு ஊக்கமாக உள்ளார். ஆகவே “படிப்பு பயம் காரணமாக சினிமாவுக்கு வந்தேன்” என்ற அவரது சொற்களில் ஒரு சிரிப்பு இருக்கும், ஆனால் அதற்குள் ஒரு பெரிய உண்மை மறைந்துள்ளது.. வெற்றிக்கு வழி பல இருந்தாலும், உழைப்பும் தன்னம்பிக்கையும் தான் அதற்கான முக்கியமான திறவுகோல்.

இதையும் படிங்க: கவர்ச்சியான முக அழகிலும்.. கண்களின் காந்த பார்வையாலும்.. வருடி இழுக்கும் இளம் நடிகை ஸ்ரீலீலா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share