×
 

அவர் தான் முதலில் ப்ரபோஸ் பண்ணாரு..! பொதுவெளியில் காதலை உடைத்த ராஷ்மிகா மந்தனா..!

ஒரு வழியாக தனது காதலை பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

ரஷ்மிகா மந்தண்ணா என்று ரசிகர்களால் அன்புடன் அழகிக்கப்படும் இவர் கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டையில் கௌடவ குடும்பத்தை சேர்ந்தவர். இவர் கடந்த  2016-ம் ஆண்டு நடித்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பார்க்க க்யூட்டாகவும், அழகாவும், புன்னையுடனும் ஜெனிலியாவை போன்ற வெகுளித்தனமான நடவடிக்கைகளையும் பார்த்து கவரப்பட்ட பல இயக்குநர்கள் இப்படத்திற்கு பின்பு ராஷ்மிகாவுக்கு பல படவாய்ப்புகளை கொடுத்தனர். 

இதனால் கிரிக் பார்ட்டி திரைப்படத்தை தொடர்ந்து, 2018-ம் ஆண்டு "சலோ" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர். பின்னர் அதே ஆண்டு, விஜய் தேவர்கொண்டா உடன் 'கீதா கோவிந்தம்' என்னும்  திரைப்படத்தில் நடித்து தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய அத்தனை மொழி திரையுலகிலும் பிரபலமானவர். இதனை அடுத்து கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டி என்பவரை ராஷ்மிகா காதலித்தார், பின் இவர்களது நிச்சியதார்தம் 2017 ஜூலை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருமணம் நடக்க இருக்கும் வேளையில் 2018ம் ஆண்டு இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இதையும் படிங்க: பர்த்டே ட்ரீட் கொடுக்கப்போகும் விஜய்.. ஜூன் 22ல்.. ரிலீசாகிறது "ஜன நாயகன்" பட முதல் பாடல்..!

இப்படி இருக்க, இதுவரை, தமிழில் இயக்குனர் பாரத் கம்மா இயக்ககத்தில் 2019ம் ஆண்டு வெளியான "டியர் காம்ரேட்", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "புஸ்பா (தி ரைஸ்)", இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "சுல்தான்", இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான "சீதா ராமம்", இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "அனிமல்", இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "வாரிசு", இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "குபேரா", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "புஷ்பா (தி ரூல்)" ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்து உள்ளார்.  

இந்த சூழலில், சமீப காலமாக நடிகை ராஷ்மிகாவும் பிரபல நடிகரான விஜய் தேவர்கொண்டாவும் காதலித்து வருவதாக அனைவராலும் கூறப்பட்டு வருகிறது. அதற்கு ஆதாரமாக இருவரும் ஒரே ஹோட்டலுக்கு செல்வது, பீச்சுக்கும் பார்ட்டிக்கும் செல்வது, ஒரே காரில் பயணிப்பது என அனைத்தும் நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், தற்பொழுது  ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், எல்.எல்.பி மற்றும் அமிகோ க்ரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பில், இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் நடிகர் தனுஷ், நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுடன் இணைந்து நடித்து உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கிட்டத்தட்ட ரூபாய் 102 கோடி  பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஃபேன் இந்தியா படமாக வெளியாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் தொகுப்பாளர் விஜய், உங்களது முதல் காதல் எப்பொழுது என கேட்டதற்கு, " பள்ளி பருவத்தில் தான் முதல் காதலே" என சொன்னார்... நீங்கள் முதலில் ப்ரப்போஸ் செய்தீர்களா அல்லது அவரா என தொகுப்பாளர் கேட்க.. அதற்கு அவர், " பள்ளி காலத்தில் அந்த பையன் தான் எனக்கு லெட்டர் கொடுத்து ப்ரபோஸ் செய்தான்" என சொன்னார். இதனை கேட்ட தொகுப்பாளர் நானே உங்களுக்கு 2000 லெட்டர் கொடுப்பேன் என சொல்ல ராஷ்மிகா முதல் அனைவரும் சிரித்தனர். 

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களை நேரில் பார்த்தால் உங்கள் சுட்டித்தனத்திற்காக நாங்களே ப்ரபோஸ் செய்வோம் என தெரிவித்து வருகின்றனர்.    


 

இதையும் படிங்க: ஆர்.ஜே பாலாஜி - சூர்யா காம்போ.. டைட்டிலுடன் வெளியானது சூர்யாவின் 45வது பட போஸ்டர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share