மகன்கள் போட்ட மாஸ்டர் பிளான்.. வலையில் சிக்கிய தனுஷ், ஐஸ்வர்யா..! நிம்மதி பெருமூச்சு விட்ட ரஜினி..!
மீண்டும் ஒன்று சேருகின்றனர் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி.
அனைவரது கனவு நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷின் இயற்பெயர் என்ன என்று கேட்டால் "வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா" என்று கூறுவர் இவர் நடிகராக மட்டுமல்லாமல், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய தனுஷ், தற்பொழுது கோலிவுட், பாலிவுட்டை கடந்து ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இப்படி, இன்று உலகையே தனது திறமையால் கையுக்குள் வைத்து கலக்கி வரும் தனுஷின் ஆரம்ப வாழ்க்கையில் அவருக்கு அச்சாணியாக இருந்த முதல் படம் 2002-ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான "துள்ளுவதோ இளமை" என்ற திரைப்படம் தான்.
இதனை அடுத்து அவர் நடித்த படங்களை பார்த்து அவரை பலரும் அவமானப்படுத்தினர். ஆனால் தனக்கு வந்த எந்த கேலி கிண்டல்களையும் பொருட்படுத்தாமல் திருடா திருடி, திருவிளையாடல், பொல்லாதவன், படிக்காதவன், வேங்கை, வேலையில்லா பட்டதாரி, த்ரீ, மாரி, ராயன் என வரிசையாக பல படங்களில் நடித்து தனக்கென ஓர் இடத்தை திரையுலகில் பிடித்தார். இப்படி, பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறிய தனுஷை "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்தின் மூத்த மகளான "ஐஸ்வர்யா ரஜினிகாந்த்" காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் இருவரும் பிரிந்து உள்ளனர். மேலும் தனுஷின் பெற்றோர்கள் என ஒரு தம்பதி வந்து அவரை பாடாய்ப்படுத்தினர். இத்தனை வலிகளையும் தாங்கி கொண்ட தனுஷ் தனது கெரியரில் முழு கவனம் செலுத்தி இன்று ஹாலிவுட் வரை சென்றுள்ளார்.
இதையும் படிங்க: வயசுக்கு தகுந்த மாதிரி நடிங்க கமல்... அப்பனும் பையனும் ஒரே பெண்ணோட... இதுவா சினிமா - கடுப்பான பிரபலம்
இந்த நிலையில் இருவரும் சட்டபூர்வமாக பிரிந்துள்ள நிலையில், இவர்களது பிரிவைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் மிகவும் சோகத்தில் இருப்பதாக அனைவரும் கூறுகின்றனர். மேலும் தனுஷ் கண்டிப்பாக இரண்டாவது திருமணம் செய்வார் என பலரும் கூறி வந்தனர். இதற்கு இடையில் இவர்கள் இருவரது மகன்களான யாத்ராவும் லிங்காவும் யாருடன் இருப்பார்கள் என்ற கேள்வி அனைவரிடமும் வந்த பொழுது. அவர்களது மகன்களை கோ பேரண்டிங் முறையில் இருவரும் சேர்ந்தே வளர்ப்பார்கள் என கூறப்பட்டது. இப்படி இருக்க, என்னதான் தனது தாய் தந்தை இருவரும் பிரிந்தாலும் மகன்களான இருவரும் தாய் தந்தையர் இருவர் மீதும் மிகுந்த புரிதலுடன் இருப்பதால் அவர்களது பந்தம் மீண்டும் தொடர வாய்ப்பு இருக்கும் என சிலர் கூறி வந்தனர்.
இப்படி பலரும் தனக்குத் தேவையான கருத்துக்களை பதிவு செய்து வந்து கொண்டிருந்த பொழுது இவர்களது மூத்த மகனான யாத்ரா சர்வதேச பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்திருக்கிறார். அங்கு பட்டம் வாங்கும் விழாவிற்கு தனது மகனுக்காக தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு இருந்தனர். மேலும் வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தனர். தனது தாய் தந்த இருவரும் ஒரே இடத்தில் வந்து தன்னை வாழ்த்தியதை பார்த்த மகன் இருவரையும் கட்டி அணைத்து முத்தம் கொடுத்த காட்சிகள் எல்லாம் இணையதளத்தில் வைரலானது.
இதனை அடுத்து தனது மகன்கள் தங்கள் மீது வைத்திருக்கும் பாசத்தை விட தங்களுக்குள் இருக்கும் ஈகோவும் பிடிவாதமும் பெரியதல்ல என நினைத்த ஐஸ்வர்யாவும் தனுஷும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த முறை தனது மகன்களுடன் ஐஸ்வர்யாவும் தனுஷும் போயஸ் கார்டனில் உள்ள பங்களாவில் தங்க இருப்பதாகவும் மகன்களின் ஆசைக்கு இணங்க தங்களது வாழ்வை மாற்றிக்கொள்ள இருப்பதாகவும் நம்ப தகுந்த வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கமல்ஹாசனுக்கு இவ்வளவு கடன் இருக்கா..! சொத்து மதிப்புக்கு ஈடா கடனும் வச்சிருக்காரே..!