தனது மகன்களுடன் இணைந்த நடிகர் ரவிமோகன்..! ஆத்திரத்தில் மனைவி ஆர்த்தி ரவி..!
தனது மகன்களுடன் நடிகர் ரவிமோகன் சேர்ந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சினிமா வட்டாரத்தில் உள்ள ஒரு சில பிரபலங்களின் வீடுகளில் எப்பொழுதும் பிரச்சனைகள் இருந்த வண்ணமே இருக்கும் அதுமட்டுமல்லாது சிலர் தங்களது வாழ்க்கை பிடிக்கவில்லை என்று வேறொரு வாழ்க்கையும் தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருவர். இப்படிப்பட்டவர்களது வரிசையில் என்றுமே ஒருவர் மட்டும் வரமாட்டார் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு தற்பொழுது வேதனை கொடுத்திருக்கும் அன்பு நடிகர் தான் ரவி மோகன்.
இவரது படத்தில் இவரது செயல்பாடுகள் அனைத்தையும் பார்த்தாலே பல பெண்கள் இவரை தங்கள் வாழ்க்கை நாயகனாக ஏற்றுக் கொள்வர். அந்த அளவிற்கு இவரது அழகும் அவரது நடவடிக்கைகளும் நடிப்பும் பலரையும் கவர்ந்திருக்கிறது. குறிப்பாக ஆண்களில் ஒரு ஜெனிலியா இருந்தால் எப்படி இருப்பாரோ அதேபோல் தான் நடிகர் ரவி மோகனும் இருக்கிறார். ஜாலியான மனிதர், பேச்சுக்களில் வல்லவர், நடிப்பதில் இவரை அடித்துக் கொள்ள ஆட்களே இல்லை, என்ஜாய்மென்ட் என்பதை தனது வாழ்க்கையின் தாரக மந்திரமாக வைத்திருக்கும் ரவி மோகனின் வாழ்க்கையில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று பலரும் தெரிவித்து வந்ததற்கு காரணம் அவரது மனைவி ஆர்த்தி ரவிதான்.
இதையும் படிங்க: ஓ.. மனைவியை இப்படியும் கோபப்படுத்தலாமா... தனது வாழ்க்கை பற்றி பேசி ஆர்த்தியை கடுப்பாகிய ரவி மோகன்..!
இவர்கள் இருவரும் ஒவ்வொரு முறையும் பேட்டிகள் கொடுக்கும் பொழுது ஒருவரைப் பற்றி ஒருவர் துல்லியமாக கணித்து வைத்திருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அந்த அளவிற்கு இவர்கள் இருவரது காதல் அவர்கள் பேசும் பொழுதே வெளிப்படும். இப்படி இருக்கும் ரவி மோகனைப் பார்க்கும் பலரும் உனக்கு என்னப்பா... அழகான மனைவி, அன்பான மகன்கள் என உன் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என சொன்னவர்களுக்கு திடீர் ஷாக் கொடுத்தார் நடிகர் ரவி மோகன். அந்த வகையில் திடீரென்று ஒரு நாள் தான் ஆர்த்தி ரவியை பிரிய இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் விவாகரத்துக்கான மனு தாக்கல் செய்தார். பின்பு தனது காதலியாக பாடகி கெனிஷாவை அறிவித்தார்.
இதனால் கடந்த சில வாரங்களாக ரவி மோகனும் ஆர்த்தி ரவியும், ஆர்த்தி ரவியின் அம்மாவும், பாடகி கெனிஷாவும் என அனைவரும் instagram - ல் அறிக்கை வாயிலாக யார் மீது குற்றம்? உள்ளது என்பதை நிரூபிக்க போராடினர். அறிக்கை வெளியிட்டு இவர்கள் மன உளைச்சல் ஆனது மட்டுமல்லாமல் அறிக்கையை மக்களையும் பார்க்க வைத்து அவர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். இப்படி இருக்க குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் இவர்களது வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, ஒன்று ரவி மோகன் தன்னுடன் வாழ வேண்டும் இல்லை எனில் தனக்கும் தனது மகன்களுக்கும் மாதம் தோறும் ரூபாய் 40 லட்சத்தை ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என செக் வைத்தார் ஆர்த்தி ரவி. இதனை அடுத்து ரவி மோகனுக்கு பதிலளிக்க வேண்டும் என அவகாசம் கொடுத்திருக்கிறார் நீதிபதி.
மேலும் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் வரை இருவரும் எந்தவிதமான அறிக்கையையும் இனி வெளியிடக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த சூழலில் நடிகர் ரவி மோகன் தனது விவாகரத்தை குறித்து பெரிதும் அலட்டிக் கொள்வதைப் போல் தெரியவில்லை. ஏனெனில் அடுத்தடுத்து தனது படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். மேலும் தற்பொழுது தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கும் ரவி மோகன் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் இன்று நடிகர் ரவி மோகன் தனது இரண்டு மகன்களையும் சந்தித்து பேசி இருக்கிறார். அதில் மூத்த மகன் ஆரவின் பிறந்த நாள் என்பதால் அவரை சந்தித்து பிறந்தநாளையும் கொண்டாடி இருக்கிறார். தற்பொழுது அந்தப் புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தனது இரண்டு மகன்களுடனும் தந்தையாக அழகிய தோற்றத்தில் நிற்கும் ரவி மோகன் தனது குடும்பத்தை முழுமையாக தனது மனைவி ஆர்த்தி ரவியுடனும் சேர்ந்து சீக்கிரம் ஒரு புகைப்படத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம் என பதிவிட்டு வருகின்றன.
இதையும் படிங்க: ஒரே கலர்ல டிரஸ் போட்டா லவ்வா.. மன்னிப்பு கேட்டு சரண்டரான பாடகி கெனிஷா..!