×
 

ஒரே கலர்ல டிரஸ் போட்டா லவ்வா.. மன்னிப்பு கேட்டு சரண்டரான பாடகி கெனிஷா..!

 'மன்னிப்பு' கேட்ட பாடகி கெனிஷாவின் வீடியோ இணையத்தில் வைரல்.

குடும்ப வாழ்க்கையில் நன்றாக இருந்த ரவிமோகன் மற்றும் ஆர்த்தி ரவி தம்பதிகளின் வாழ்க்கையில் யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை இருவரும் தற்பொழுது விவாகரத்து வாங்க போராடி வருகின்றனர். இப்படி இருக்க, தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் மகளின் இல்லத் திருமண விழாவில் பாடகி கெனிஷாவுடன் ஒரே நிற ஆடையில் வந்து இறங்கி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் ரவி மோகன். இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பேசுபொருளாக மாறியது. அடுத்ததாக இந்த செய்தி ஆர்த்தி காதுகளில் விழ, தனது இன்ஸ்ட்டாகிராம் வாயிலாக, இப்பொழுது எங்கள் பிரிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என பதிவு செய்திருந்தார். 

ஆர்த்தியின் பதிவை பார்த்து கடுப்பான பாடகி கெனிஷா, "எப்பொழுதுமே ஒரு ஆண் கலவரமான உணர்ச்சிகளைக் கொண்ட பெண்ணிடம் ஈர்க்க மாட்டார். அவருக்கு அமைதி கொடுக்கும் பெண்ணிடமே அவரது இதயம் செல்லும்" என பதிவிட்டு தன் காதலை உறுதி செய்தார். அவரை தொடர்ந்து ரவி மோகனும் என்னமோ அனைவரும் ஆர்த்தி ரவி தான் பாதிக்கப்பட்டார் என்று சொல்கிறீர்களே... உண்மையில் இந்த திருமண பந்தத்தில் பாதிக்கப்பட்டவர் என்றால் அது நான் மட்டும்தான். என்னுடைய வீட்டை என்னிடமிருந்து பறித்துக் கொண்டார்கள், என்னுடைய வாகனத்தை பறித்துக் கொண்டார்கள், என்னுடைய பணங்களை பறித்துக் கொண்டார்கள், வெறும் காலோடு என்னை வெளியே அனுப்பும் பொழுது எனக்கு நடந்த அனைத்து கொடுமைகளையும் கூடவே இருந்து பார்த்தவர் பாடகி கெனிஷா மட்டும் தான்" என தெரிவித்தார். மேலும், தனது வாழ்க்கையில் நடந்த அனைத்து பிரச்சனைகளுக்கு அவரது மாமியார் சுஜாதா தான் காரணம் என தெரிவித்தார். 

இதையும் படிங்க: தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ரவி மோகன்.. புதிய படத்தின் டைட்டில் இதுதான்..!

இதனை பார்த்து சூடான ரவி மோகனின் மாமியார் சுஜாதா, நான்கு பக்கங்களுக்கு தனது மறுப்பை அறிக்கையாக தெரிவித்து இருக்கிறார். அந்த அறிக்கையில், கோடிக்கணக்கான ரூபாய் கடன்களுக்கு ரவிமோகனை நான் பொறுப்பேற்க வைத்தேன் என சொல்லுகிறாரே அவரை வைத்து தயாரித்த படங்களுக்கான ரூ.100 கோடி கடனுக்கான வட்டியை நான் மட்டும் தான் செலுத்தி வருகிறேன். ரவி மோகன் சொல்லும் அடுக்கடுக்கான பொய்கள் அனைத்தும் அவரை தரம் தாழ்த்தி விடுகிறது. அவரை வைத்து நான் படம் எடுக்க ஒருநாளும் நினைக்கவில்லை அவரது ஆலோசனையின் பேரிலேயேதான் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு நான் தள்ளப்பட்டேன். அவரை நான் கடனாளியாக்கினேன் என்றாலும், ஒரே ஒரு ரூபாய் கடனுக்கு அவரை பொறுப்பேற்க வைத்திருந்தாலும், அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் ரவி பார்ப்போம். இன்று என் மகளின் வாழ்க்கை பறிபோகி நிற்கிறது என்றார்.

இதனை அடுத்து, கெனிஷாவை பலரும் திட்டி தீர்க்க, ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத அவர் மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் "எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும், நம்பிக்கையில் ஒரு அமைதி நிலவுகிறது, என் ஆன்மாவுக்குள் தனிமையும் ஒரு அமைதியான போராட்டமும் நடக்கிறது. என் மீது நீங்கள் குச்சிகளும் கற்களும் வீசினாலும் அது என்னை காயப்படுத்தாது. நான் அதிலிருந்து மீண்டு வந்துவிடுவேன். நான் இசையைப் பற்றிக்கொள்ள விரும்புகிறேன், தழும்புகளை ஞானமாக மாற்றுகிறேன்.நாளைய விடியல்கள் மற்றும் புதிய தொடக்கங்களுக்கு ஆழமான துயரங்களிலிருந்து, என் ஆன்மா பாடுகிறது" என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, சமீபத்தில் குடும்ப நல நீதிமன்றத்தில் ரவிமோகன் ஆர்த்தி ரவியின் விவாகரத்து வழக்கு விசாரிக்கப்பட்டது. அதில் ஆர்த்தி ரவி தரப்பில், ஒன்று ரவிமோகன் தன்னுடன் வாழவேண்டும் அல்லது மாதம் தோறும் தனக்கும் தனது மகன்களின் வாழ்வாதாரத்திற்கு அவர் ரூ.40 லட்சம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு தகுந்த பதிலளிக்கும்படி கோர்ட் ரவிமோகன் தரப்புக்கு உத்தரவிட்டு இருந்தது. மேலும், இனி இருவரும் பொதுவெளியில் சமூக ஊடகங்களில் அறிக்கை வெளியிடக்கூடாது என உத்தரவிடப்பட்டது. இதற்கு இணங்கி இருவரும் எந்தவித அறிக்கையும் வெளியிடாத நிலையில், அதற்கு மாறாக இருவரின் வழக்கறிஞர்களை வைத்து அறிக்கையை நீக்க கோர்ட் ஆர்டர் காஃபியை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை தொடர்ந்து பாடகி கெனிஷாவும் இனி தன்னை பற்றி அவதூறாக யார் பேசினாலும் அவர்கள் மீது சட்டம் தன் கடமையை செய்யும் என அவரும் ஒரு கோர்ட் ஆர்டரை வெளியிட்டுள்ளார். 

இந்த நிலையில், தனியார் சேனலுக்கு பேட்டியளித்த கெனிஷா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அதன்படி அவர் பேசுகையில், " ரவிமோகனுடன் பழகுவதற்கு முன்பாகவே பல வருடங்களாக எனக்கு ஐசரி கணேஷ் சாரை நன்றாக தெரியும். அதனால் தான் திருமணத்தில் கலந்து கொண்டேன். அப்போது ரவி மோகனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதால் அவரும் என்னுடன் வந்திருந்தார். ஆம்... நாங்கள் இருவரும் ஒரே வண்ண ஆடை அணிந்து தான் கல்யாணத்திற்கு வந்தோம். அது தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டது. ஆனால், எனக்கு புரியாத விஷயம் என்னவெனில் நண்பர்கள் ஒரே வண்ண ஆடை அணிவது அவ்வளவு பெரிய விஷயம் ஒன்றும் இல்லையே. 

அது ஏன் இங்கு பெரியதாக பேசப்படுகிறது என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை. உண்மையில் இதில் பாதிக்கப்பட்டது ஐசரி கணேஷ் சார் தான்.  காரணம் நாங்கள் இருவரும் ஒரே கலர் உடையில் அவர் மகள் திருமணத்திற்கு வந்ததை வைத்து ஐசரி கணேஷ் சாரை பலரும் திட்டி இருந்தனர். இதனால் நான் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த வேளையில் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மத்தபடி மற்றவர்கள் என்னை பற்றி பேசுவது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை" என்று தெரிவித்துள்ளார். 

  

இதையும் படிங்க: இந்த படத்தில் பார்க்க எப்படி இருக்கேன் தெரியுமா... தன்னைத்தானே புகழ்ந்த ரவி மோகன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share