திடீரென மாலையும் கழுத்துமாக வந்த ரவி மோகன் கெனிஷா.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!
ரவிமோகன் கெனிஷா இருவரும் மாலையும் கழுத்துமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் வேதனையில் உள்ளனர்.
தமிழ் பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களும் தனக்கு கணவனாக இப்படி ஒருவன் வரமாட்டானா என ஏங்கும் அளவிற்கு இருப்பவர் தான் நடிகர் ரவி மோகன். ஜெயம் படத்தில் நடித்ததால் மக்கள் மத்தியில் ஜெயம் ரவி என அன்புடன் அழைக்கப்பட்ட இவர், நிறைய படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்திருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளியான தில்லாலங்கடி படத்தில் இவரது காமெடி திறமையால் அனைவரையும் தன் வசமாக்கினார். அடுத்து எம்.குமரன் s/o மகாலட்சுமி என்ற படத்தில் பாக்ஸராக வந்து மலையாளியாக வந்த அசினை, ஒய் மலபார் என சொல்லி மலையாள பெண்களை திரும்பி பார்க்க வைத்தார்.
இப்படிப்பட்ட ரவிமோகன் பல வருடங்களாக ஆர்த்திரவியுடனும் தனது இரண்டு மகன்களுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இப்படி இருக்க திடீரென ஒருநாள் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்திற்காக நிற்க, அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இப்படி இருக்க, ஒருநாள் தயாரிப்பாளரான ஐசரி கே கணேஷ் மகளின் இல்லத்திருமண விழாவில் ரவிமோகனும் பாடகி கெனிஷாவும் ஜோடியாக வந்து நிற்க இணையத்தில் பேசுபொருளாக மாறியது. இதனை அடுத்து ரவிமோகன் கெனிஷாவை காதலிப்பது அனைவருக்கு அப்பட்டமாக தெரிய ஆரம்பித்தது.
இதையும் படிங்க: தன்னை பற்றிய அவதூறு பதிவுகளை நீக்குங்கள்.. வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ஆர்த்தி ரவி..!
இதனை தொடர்ந்து ரவிமோகன், ஆர்த்தி ரவி, ரவிமோகன் மாமியார், கெனிஷா என அனைவரும் அறிக்கை வாயிலாக தொடர்ந்து சண்டையிட்டு வந்தனர். இப்படி இவர்கள் இருவரது சண்டையை பார்த்த நீதிமன்றம் இனி இருவரும் எந்த வித அறிக்கையும் வெளியிட கூடாது என உத்தரவிட்டது. அதன்படி, சமீபத்தில் குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான ஆர்த்தி ரவி, நடிகர் ரவிமோகனிடம் ஜீவனாம்சமாக ரூ.40 லட்சம் மாதம் தனக்கும் தனது மகன்களுக்கும் கொடுக்க வேண்டும் அல்லது என்னுடன் வந்து வாழ வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தார். இதனை குறித்து விளக்கம் அளிக்க ரவிமோகன் தரப்புக்கு அவகாசம் கொடுத்து உத்தரவிடபட்டது.
மேலும், இனி நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் இருவரும் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என எச்சரித்துள்ளது. இவர்களை தொடர்ந்து இணையதளங்களில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருபவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார் பாடகி கெனிஷா. அவரை தொடர்ந்து சமீபத்தில் ரவிமோகன் வழக்கறிஞர் ஆர்த்தி ரவிக்கு நோட்டிஸ் அனுப்பினார். அதில் சமூக வலைத்தளங்கில் பதிவிட்ட அறிக்கைகளை டெலிட் செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.
இப்படியாக இவர்கள் இருவரது அறிக்கை சண்டை முடிந்துள்ள இந்த வேளையில் மீண்டும் பூகம்பத்தை கிளப்பி இருக்கிறார் ரவிமோகன். அதன்படி, ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஜோடியாக குன்றக்குடி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்பொழுது அங்கிருந்த பக்தர்களுடன் கெனிஷா ரவிமோகன் இருவரும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் கோவிலில் இருவரும் மலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ரவிமோகனுக்கு சப்போர்ட் செய்த பாடகி சுசித்ரா..! கடுப்பில் ஆர்த்திரவியின் அப்பா செய்த செயல்..!