×
 

ரவிமோகனுக்கு சப்போர்ட் செய்த பாடகி சுசித்ரா..! கடுப்பில் ஆர்த்திரவியின் அப்பா செய்த செயல்..!

கெனிஷாவிற்கும் ரவிமோகனுக்கும் சப்போர்ட் செய்த பாடகி சுசித்ரா மீது புகார் அளித்துள்ளார் ஆர்த்தியின் தந்தை.

சமீபத்தில் குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான ஆர்த்தி ரவி, நடிகர் ரவிமோகனிடம் ஜீவனாம்சமாக ரூ.40 லட்சம் மாதம் தனக்கும் தனது மகன்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தார். இதனை குறித்து விளக்கம் அளிக்க ரவிமோகன் தரப்புக்கு அவகாசம் கொடுத்து உத்தரவிடபட்டது. மேலும், இனி நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் இருவரும் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என எச்சரித்துள்ளது. இவர்களை தொடர்ந்து இணையதளங்களில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருபவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார் பாடகி கெனிஷா.

நீதிமன்றத்தின் வார்த்தைக்கு இணங்கி, மூவரும் அறிக்கை வெளியிடுவதை நிறுத்திய இந்த வேளையில் ரவிமோகனின் வழக்கறிஞர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி, ரவிமோகனை பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு உள்ள அவதூறு கருத்துகளை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என அவரது மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. மேலும் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், டெலிகிராம் என அனைத்து தளங்களுக்கும் இது பொருந்தும் என்றும் அப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த பதிவுகள் நீக்கப்படவில்லை என்றால், சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இதையும் படிங்க: அறிக்கையை எப்ப டெலிட் பண்ணுவீங்க மேடம்..! ஆர்த்திரவிக்கு ரவிமோகன் அனுப்பிய நோட்டீஸ்..!

இந்த நிலையில், சமீபத்தில் கெனிஷாவை பற்றி அவதூறாக பேசுபவர்களையும், ஆர்த்தி ரவிக்கு ஆதரவாக பேசுபவர்களையும் வசைபாடி இன்ஸ்ட்டாவில் பதிவிட்டு இருந்தார் பாடகி சுசித்ரா, அவர் வெளியிட்ட பதிவில், " முதலாவது எனக்கு புரியாத ஒரு விஷயம் என்றால் ஜெயம் ரவியும் பாடகி கெனிஷாவும் என்ன தவறு செய்தார்கள். சினிமா உலகத்தில் யாரும் செய்யாத பெரிய தப்பையா ஜெயம் ரவி செய்து இருக்கிறார். எல்லோரும் மறைமுகமாக செய்கிறார்கள் ஜெயம் ரவி வெளிப்படையாக செய்து இருக்கிறார் அவ்வளவுதான். எவ்வளவு பெரிய அங்கீகாரத்தை பாடகி கெனிஷாவிற்கு ரவி மோகன் கொடுத்திருக்கிறார் அதை போய் இழிவாக பேசுகிறீர்களே. இத்தனை நாள் கெனிஷாவை பற்றி பேசாத ஊடகங்கள் முதல் மக்கள் வரை அனைவரும் இன்று அவருடைய புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு அதை பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் பாடகி ஆண்ட்ரியா ஸ்டேஜ்ஜில் போடக்கூடிய டிரஸ் போலத்தான் பாடகி கணேஷாவும் போடுகிறார்கள். வித்யா வாக்ஸ் வயலில் பாடும் பாடலை தான் இவரும் பாடுகிறார்கள்.  

ஆர்த்தி ரவியின் இரண்டு குழந்தைகளும் இப்பொழுது 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்று ரோட்டில் நின்று அழுது கொண்டிருக்கிறார்களா என்ன. அவர்கள் இருவரும் பங்களாவில் சந்தோஷமாக தான் இருக்கிறார்கள். ஒரு பக்கம் அம்மா செல்லம் மறுபக்கம் பாட்டி செல்லம். எல்லா பக்கமும் ஆன்டி செல்லம் என தங்கம் தங்கமாய் அவர்களை தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். என்னமோ கல்யாணமாகி குழந்தை பெற்றவர்கள் யாரும் இங்கு விவாகரத்தே வாங்காததை போல் பேசுகிறீர்கள். ஒரு பக்கத்தில் அறிக்கை வெளியிட்ட ஆர்த்திக்காக பதறுகிறீர்கள். ஐந்து பக்கம் அறிக்கை போட்டு கதறுகிற ரவிமோகனை நம்ப மாட்டேங்கிறீர்க. ஒரு பெரிய மனுசனையே தன்னுடைய கண்ட்ரோல்ல வைக்கணும்னு நினைச்ச ஆர்த்தி ரவிக்கு அவர்களுடைய இரண்டு மகன்களையும் கண்ட்ரோலில் வைக்க தெரியாதா என்ன?  நீங்க எல்லோரும் தான், அந்த இரண்டு பசங்களை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவர்கள் இருவரும் ஜாலியாக ஊட்டி கொடைக்கானல் என சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பசங்களையும் வைத்து ஆர்த்தி ரவி உங்கள் அனைவருடைய அனுதாபத்தையும் வாங்குகிறார்கள் என்பது கூட உங்களுக்கு புரியல" என பேசியிருந்தார். 

இதற்கு இதுவரை எந்தவித பதிலும் ஆர்த்திரவி தரப்பில் இருந்து தெரிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்பொழுது ஆர்த்தி ரவியின் தந்தை இந்த வீடியோவை பார்த்து கோபத்தில் சிக்கலான முடிவை எடுத்துள்ளார். அதன்படி, தனது மகளின் மீது அவதூறு பரப்பும் வகையில் பாடகி சுசித்ரா மனம்நோகும்படியாக வீடியோவில் பேசியுள்ளார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார் ஆர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி.  


 

இதையும் படிங்க: நக்கல்யா உனக்கு.. ஒரே இன்ஸ்டா ஸ்டேட்டஸில் ஆர்த்தியை சூடேற்றிய ரவி மோகன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share