அறிக்கையை எப்ப டெலிட் பண்ணுவீங்க மேடம்..! ஆர்த்திரவிக்கு ரவிமோகன் அனுப்பிய நோட்டீஸ்..!
ஆர்த்தி ரவிக்கு நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார் ரவி மோகன்.
சமீபகாலமாக ஆர்த்தியும் ரவிமோகனும் தனிமையில் பேசுவதை விட்டுவிட்டு அறிக்கை வாயிலாக பேசி வந்தனர். அவர்கள் இருவரும் அறிக்கை வாயிலாக பேசியவை என்றால் உன்னால் நான் கேட்டேன் என்னால் நீ கேட்டாய் என்று சொல்வதைப் போல மாறி மாறி பேசி வந்தனர். இப்படி இவர்கள் இருவரது சண்டையிலும் மூன்றாவதாக சிக்கினார் பாடகி கெனிஷா. இப்படி இவர்கள் இருவரது சண்டையை பார்த்த நீதிமன்றம் இனி இருவரும் எந்த வித அறிக்கையும் வெளியிட கூடாது என உத்தரவிடப்பட்டது.
அதன்படி, சமீபத்தில் குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான ஆர்த்தி ரவி, நடிகர் ரவிமோகனிடம் ஜீவனாம்சமாக ரூ.40 லட்சம் மாதம் தனக்கும் தனது மகன்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தார். இதனை குறித்து விளக்கம் அளிக்க ரவிமோகன் தரப்புக்கு அவகாசம் கொடுத்து உத்தரவிடபட்டது. மேலும், இனி நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் இருவரும் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என எச்சரித்துள்ளது. இவர்களை தொடர்ந்து இணையதளங்களில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருபவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார் பாடகி கெனிஷா.
இதையும் படிங்க: நக்கல்யா உனக்கு.. ஒரே இன்ஸ்டா ஸ்டேட்டஸில் ஆர்த்தியை சூடேற்றிய ரவி மோகன்..!
அவர் வெளியிட்ட அந்த அதிகார பூர்வ அறிக்கையில், தன்னை குறித்து வெளிப்படையான மற்றும் ஆபாசமான செய்திகள்,மீண்டும் மீண்டும் ஆன்லைன் பின்தொடர்தல் மற்றும் டேக்கிங் செயல்கள். இவை அனைத்தும் பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டுவதற்கும், உளவியல் ரீதியான காயத்தை ஏற்படுத்துவதற்கும், வேண்டுமென்றே நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதற்கும் கணக்கிடப்படுகின்றன.
இந்தச் செயல்கள் LEO வரவேற்பு முன்னேற்றங்கள் அல்லது பாலியல் வண்ணக் கருத்துகள்), பிரிவு 351 (குற்றவியல் மிரட்டல்) பாரதிய நியாய சன்ஹிதா, 2023, பிரிவு 75 (Cand மூலம் பாலியல் துன்புறுத்தல் பிரிவு 356 (அவதூறு), அத்துடன் தகவல்களின் பல விதிகள் ஆகியவற்றின் நேரடி மீறல்களுக்குச் சமம். ஆகவே, இனி தன்னை பற்றி பேசினாலோ இணையத்தில் தேவையில்லாமல் பதிவு செய்தாலோ சட்டரீதியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தார் கெனிஷா.
இந்த நிலையில், மூவரும் அறிக்கை வெளியிடுவதை நிறுத்திய இந்த வேளையில் ரவிமோகனின் வழக்கறிஞர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, ரவிமோகனை பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு உள்ள அவதூறு கருத்துகளை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என அவரது மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. மேலும் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், டெலிகிராம் என அனைத்து தளங்களுக்கும் இது பொருந்தும் என்றும் அப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த பதிவுகள் நீக்கப்படவில்லை என்றால், சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கெனிஷாவோட பண்ண தப்ப மறைக்க எவ்வளவு நாடகம்..! புயலை கிளப்பிய ஆர்த்தி ரவி..!