வீடியோ சாங்கை வெளியிட்டு ஆர்த்தி ரவியை சூடாக்கிய பாடகி கெனிஷா..! குளிர்காயும் நடிகர் ரவிமோகன்..!
பாடகி கெனிஷாவின் 'நான் போகும் பாதையெல்லாம் நீதானடா' என்ற பாடல் இணையத்தில் வைரல்.
ஒரு பெண்ணுக்காக இரண்டு ஆண்கள் அடித்து கொண்ட காலம் மாறி தற்பொழுது ஒரு ஆணுக்காக இரண்டு பேர் அடித்து கொள்ளும் காலம் வந்து விட்டது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்கில் அதிகமாக பேசிவர காரணம் ஒருவர் தான். அவர் தான் நடிகர் ரவிமோகன். இவரது வாழ்வில் நடப்பவைகள் தான் இன்று ஹார்ட் ஆஃப் தீ டாப்பிக்காக உள்ளது.
அப்படிப்பட்ட ரவிமோகன் மற்றும் ஆர்த்தி ரவியின் வாழ்வில் புதியதாக விளக்கேற்ற வந்தவர் தான் பாடகி கெனிஷா.. சில நாட்களாக ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் காதலிப்பதாக அனைவரும் கூறும்பொழுது தவிர்த்து வந்த ரவி, ஐசரி கணேஷ் சார் திருமணத்தில் ஒன்றாக வந்து அதனை உறுதிப்படுத்தினார். அப்பொழுது ரவிமோகன் கூறும்பொழுது, " உண்மையில் பல நாட்களாக திருமண பந்தத்தில் பாதிக்கப்பட்டவன் நான் தான் ஆர்த்தி அல்ல. எனது பெற்றோரை கூட சந்திக்க முடியாத அளவிற்கு தனிமையில் சுற்றி திரிந்தேன்.
இதையும் படிங்க: அட காலிலே விழுந்துட்டாரய்யா.. "காந்தாரா 2" படப்பிடிப்பின் தொடர் மரணம்.. தயாரிப்பாளர் செய்த தரமான சம்பவம்..!
பணம் இல்லாமல் அலைந்தேன். இந்த திருமண வாழ்க்கை வேண்டாம் இதில் இருந்து எப்படியாவது வெளியே வந்தால் போதும் என பல வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்தேன். எப்படி வெளியேறுவது என் மகன்களும் உள்ளார்களே என மிகுந்த குழப்பத்தில் இருந்த எனக்கு தெளிவு படுத்தி, பயத்தை போக்கி என்னை வெளியே கொண்ட வந்தவர் தான் என் தோழி பாடகி கெனிஷா.
இந்த பிரிவு சாதாரணமாக நான் எடுத்த முடிவல்ல மிகுந்த மனவேதனையுடன் நான் எடுத்த முடிவு. என் வாழ்வில் நான் சந்தித்த அற்புதமான துணை என்றால் அவர் தான் பாடகி கெனிஷா பிரான்சிஸ். அவரைப் பொறுத்தவரை, நீரில் மூழ்கும் ஒருவரைக் காப்பாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேவதை அவர். என்னை உடைத்துக் கொண்டிருந்த ஒரு வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்ல எனக்கு தைரியம் மட்டுமே இருந்தது. அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருந்த எனக்கு, அவர் தான் உயிர்நாடியாக மாறினார். நீங்கள் அனைவரும் என்னை குற்றம் சொல்லுகிறீர்கள் கெனிஷாவை குற்றம் சொல்லுகிறீர்கள் ஆனால் உண்மை என்ன தெரியுமா, நான் சம்பாதித்த மொத்த பணம், ஆசையாய் வாங்கின வாகனம், என்னுடைய சொத்துக்கள்,
எனது மரியாதை என அனைத்தையும் என்னிடம் இருந்து பறித்து செருப்பு கூட அணியாமல் வெறுங்காலுடன் என் சொந்த வீட்டை விட்டு என்னை வெளியே அனுப்பினார்கள் ஆர்த்தி குடும்பத்தினர். அப்பொழுதும் எனக்காக வந்து நின்றவர் கெனிஷா மட்டும்தான். என்னுடைய நிலை என்ன என தெரிந்து எனக்கு துணையாக நின்ற தேவதை அவர். இதுவரை நான் நடத்திய சட்ட ரீதியான அனைத்துப் போராட்டங்களையும் நேரடியாக பார்த்தார் கெனிஷா.
என் மீது இரக்கம் காட்ட யாரும் இல்லாத பொழுது என்னை தாயை போல் அரவணைத்தவர் அவர் தான். நல்ல பாடகி அதே சமயம் நல்ல தெரபிஸ்ட் ஆக இருக்கும் அவரை நான் சந்தித்து எனது பிரச்சனைகளை கூறிய பொழுது தெரபிஸ்ட்டாக இல்லாமல் தோழியாக இருந்து எனக்கு உதவி செய்தார். நான் ஆர்த்தியை விட்டு தான் பிரிகிறேன்" என கூறி தன் காதலியை விட்டு கொடுக்காமல் பேசியிருந்தார்.
இப்படி ஒருபுறம் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் கெனிஷாவின் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ரவி மோகன். தற்பொழுது மீண்டும் தனது காதலை உறுதி செய்யும் விதமாக பாடகி கெனிஷா, பாடி நடனம் ஆடி வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் அதில் வரும் வரிகளான " என் வாழ்வின் அர்த்த குரு நீதானடா... என் பார்வை என்றென்றும் உன் மேல தான்... என் தங்கமே.. என் செல்லமே..
நான் போகும் பாதை எல்லாம் நீ தானடா.. தாங்காத போதை எல்லாம் உன்னால தான்... என் கல்லனே... நீதானே.. அன்றும் இன்றும் அன்பே ஒன்றாக்குமே... நீயும் நானும் கருவில் உண்டானவர்களே... நீயும் எனது நானும் உனது காலம் நமதே.." என்ற வரிகளுடன் இந்த பாடல் அமைந்துள்ளதை பார்த்த ஆர்த்தி ரவி தற்பொழுது மிகவும் அப்செட்டில் இருக்கிறாராம். காரணம் அந்த பாடலின் கடைசியில் ரவி மோகன் வந்து சிரிப்பதை பார்த்து கடுப்பில் இருக்கிறார் ஆர்த்தி.
இந்த வீடியோ பாடலை கேட்ட நெட்டிசன்கள், இது ரொம்ப தப்புங்க.. உங்க காதலை சொல்ல இப்படி ஒரு பாட்டு தேவையா...அவருடைய பசங்கள நினைத்து பாருங்க என கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் ஆர்யா சொன்னது உண்மையா? - பிரபல ஓட்டலை யாருக்கு விற்றிருக்கிறார் தெரியுமா?