×
 

விவாகரத்து வழக்குடன் இலவச இணைப்பாக வந்த அடுத்த வழக்கு..! ரூ.6 கோடியால் சிக்கித் தவிக்கும் நடிகர் ரவிமோகன்..!

ஏற்கனவே நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு இருக்கும் நிலையில் தற்பொழுது புதிய வழக்கில் சிக்கி இருக்கிறார் நடிகர் ரவிமோகன்.

தமிழ் திரையுலகத்தில் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்திய விவகாரம் என்றால், பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன் ரூ.6 கோடி பணத்தை திருப்பி தரக்கோரி பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விவகாரம் தான். இதற்கு காரணம், கடந்த 2024ம் ஆண்டு ரவி மோகனுடன் அந்த நிறுவனம் இரு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ததாகவும், அதற்காக ரூ.6 கோடி முன்பணம் அவர் பெற்றதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரவி மோகன் எந்தவித கால்ஷீட்டும் அளிக்காமல் இருந்ததால், படப்பிடிப்பை துவக்க முடியாமல் போனதாகவும், அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை சுட்டிக்காட்டியும், பாபி டச் கோல்டு நிறுவனம் நீதிமன்றத்தில் ரவிமோகனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், ரவி மோகன் இந்த முன்பணத்தை தனது சொந்த தயாரிப்புகளுக்காக அல்லது தனிநபர் செலவுகளுக்காக பயன்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இந்நிலையில் அவர் தயாரிக்க உள்ள புதிய படமான 'ப்ரோ கோட்' படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்றும், பிற நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் நடிக்க தடை விதிக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக ரவி மோகன் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அத்துடன், வழக்கு விசாரணையானது வரும் ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் சர்ச்சையால் நடிகர் ரவி மோகனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவிமோகன் ஸ்டுடியோஸ் மூலம் தயாரிகி வரும் 'ப்ரோ கோட்' திரைப்படத்திற்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் இதில் ரவி மோகனே கதாநாயகனாகவும் நடிக்கிறார். அவருடன், பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் இடம்பெறுகிறார். இப்படத்தை வடக்குப்பட்டி ராமசாமி மற்றும் டிக்கிலோனா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்குகிறார்.

இதையும் படிங்க: தனது மகன்களுடன் இணைந்த நடிகர் ரவிமோகன்..! ஆத்திரத்தில் மனைவி ஆர்த்தி ரவி..!

இப்படம் பற்றி அறிவிக்கப்பட்டதிலிருந்து, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் தற்போது இந்த முன்பணம் தொடர்பான வழக்கு விவகாரம், படம் தயாராகுமா என்ற அச்சத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. இந்த வழக்கு தமிழ் சினிமா வட்டத்தில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், நடிகர் ரவி மோகனின் புதிய தயாரிப்புக்கும் தடையாக மாறும் அபாயம் உருவாகியுள்ளது. வரும் ஜூலை 23ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பது சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ஆர்த்தி ரவியுடனானா விவாகரத்து வழக்கும் நிலுவையில் இருப்பதால் நீதிமன்றத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறார் ரவி மோகன் என அவரது ரசிகர்களும் சினிமா வட்டாரங்களிலும் பரவலாக பேசிவருகின்றனர்.

இதற்கு என்ன செய்ய போகிறார் ரவி மோகன் என்ற பார்வை ஒருபக்கம் இருந்தாலும், இது ரவிமோகனுக்கு ஆர்த்தி ரவி கொடுக்கும் மறைமுகமான அடியாக இருக்குமோ என நெட்டிசன்கள் பரவலாக பேசி வருகின்றனர். 

இதையும் படிங்க: ஓ.. மனைவியை இப்படியும் கோபப்படுத்தலாமா... தனது வாழ்க்கை பற்றி பேசி ஆர்த்தியை கடுப்பாகிய ரவி மோகன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share