ஆர்த்தி ரவி போட்ட எமோஷனல் பதிவு..! நடிகர் ரவிமோகனை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!
ஆர்த்திரவி எமோஷ்னல் பதிவால் ரவிமோகனை வம்பிழுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சமீபத்தில் ரவிமோகன் பாடகி கெனிஷாவை காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் பரவ, அதனை பாடகியும் அப்பொழுது மறுத்தார். ஆனால், தயாரிப்பாளரான ஐசரி கே கணேஷ் மகளின் இல்லத்திருமண விழாவில் இருவரும் ஜோடியாக வந்து நிற்க அது இணையத்தில் பேசுபொருளாக மாறியது.
ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி, ஒரு அறிக்கை ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டார். அதில், ஒரு வருடமாக என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு இதுவரை நான் எந்த பதிலும் கூறாமல் இருந்தேன். தற்போது உலகமே நாங்கள் பிரிய என்ன காரணம் என்பதை தெரிந்துகொண்டிருக்கும். என்னை ரவி மோகனின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் என மீடியாவிடம் கேட்டு கொள்கிறேன். சட்டப்படி, எனக்கும் ரவி மோகனுக்கும் விவாகரத்து ஆகவில்லை. ஒரு அப்பாவாக ரவி மோகன் தனது மகன்களை தவிக்கவிட்டு சென்று உள்ளார். எந்த பண உதவியும் இல்லாமல் நாங்கள் இருவரும் சேர்ந்து கட்டிய வீட்டில் இருந்து பேங்க் மூலமாக எங்களை காலி செய்ய வைத்துள்ளார் ரவி " என தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: திடீரென மாலையும் கழுத்துமாக வந்த ரவி மோகன் கெனிஷா.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!
இதனால் அனைவரும் பாடகி கெனிஷாவை பற்றி அவதூறாக பேச, டென்ஷானான அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஆர்த்தி ரவிக்கு பதில் கொடுத்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள பதிவில் " ஒரு ஆண் கலவரமான உணர்ச்சிகளை கொண்ட பெண்ணிடம் ஈர்க்கப்பட மாட்டார். அவருக்கு அமைதி கொடுக்கும் பெண்ணிடமே அவரது இதயம் செல்லும். அந்த பெண்ணின் கனிவு என்பது ஒரு பாவனையாக இருக்காது.அது ஒரு பெரிய சக்தியாக இருக்கும். அப்படி இருக்கையில் இருவரும் அவரவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வர்" என வெளிப்படையாக இருவரும் ஒன்றாக இருப்பதை பற்றி தெரிவித்து இருந்தார்.
இதனை அடுத்து நடிகர் ரவிமோகனும் தனது ஆதங்கத்தை அறிக்கை வாயிலாக வெளியிட்டார். இதனை தொடர்ந்து சமீபத்தில் குடும்பநல நீதிமன்றத்தில் இவர்கள் இருவரது விவாகரத்து வழக்கானது விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, ஆர்த்தி ரவி ஜீவனாம்சமாக மாதம் தோறும் ரூ.40 லட்சம் வேண்டும் என கேட்டு ரவிமோகனுக்கு செக் வைத்துள்ளார். இதற்கு தகுந்த விளக்கம் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இருவரும் இனி கோர்ட்டின் அனுமதியில்லாமல் எந்தவித அறிக்கையும் வெளியிட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனாலும் இருவரும் தனது வழக்கறிஞர்களை வைத்து அறிக்கையை டெலிட் செய்ய சொல்லி ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், ஆர்த்தி ரவி தன் அப்பாவை நினைத்து இன்ஸ்ட்டாவில் போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், "என்னை முதலில் நேசித்தவர் இன்னும் என்னை நேசிக்கிறார். சில வார்த்தைகள் அன்றாட பயன்பாட்டிற்கு மிகவும் கனமாக இருக்கின்றன. ஆனால் இன்று, நான் முயற்சி செய்கிறேன். என்னைச் சுற்றி யாரும் இல்லை என நான் உணர்ந்தபோது, நிச்சயமற்றதாக என்னுடன் இருந்த ஒரே விஷயம் நீங்கள் தான். நான் எப்படி கடந்து செல்வேன் என்று எனக்குத் தெரியாத நாட்கள் நிறைய இருந்தன. ஆனால் நீங்கள் அங்கே இருந்தீர்கள். நீங்கள் என்ன செய்வது என்று கேட்கவில்லை. நீங்கள் என் பக்கம் உறுதியாக நின்றீர்கள் - அமைதியாக, உறுதியாக, வலிமையாக.
அப்பா, ஒரு காலத்தில் நான் சாதாரணமாக எடுத்துக்கொண்டதை இப்போது நான் காண்கிறேன் - கேட்க வேண்டிய அவசியமின்றி, நீங்கள் எப்போதும் காட்டிய விதம். சத்தம் இல்லை, பாராட்டு இல்லை - நீங்கள் மட்டுமே, அங்கே இருப்பது. குழந்தைகள் தாங்கள் பார்ப்பதை பிரதிபலிக்கிறார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். என் பையன்கள் இன்னும் உலகைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும்போது, அவர்கள் முக்கியமான ஒன்றைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்: நிபந்தனைகள் இல்லாமல் நேசிக்கப்படுவது எப்படி இருக்கும். நீங்கள் என்னை மட்டும் வளர்க்கவில்லை. நீங்கள் அவர்களையும் வளர்க்கிறீர்கள் - உண்மையிலேயே முக்கியமான அனைத்து வழிகளிலும்.
அப்பா... உங்க கண்களில் நம்பிக்கையுடன் ஒரு காலத்தில் நீங்க வளர்த்த அதே பெண் நான் இல்லை என்பது எனக்குத் தெரியும். வாழ்க்கை என்னை யாரும் எதிர்பார்க்காத விதங்களில் சோதித்திருக்கிறது. நீங்கள் என்னுடைய பழைய அவளைத் திரும்பி பார்க்க விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும் - அவள் இருந்த அதே வழியில். நான் முயற்சி செய்கிறேன். நான் அவளை மீண்டும் கண்டுபிடிப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நான் உங்கள் சிறுமியாக மீண்டும் வருவேன். தந்தையர் தின வாழ்த்துக்கள், அப்பா. @krishnamurthyvijaykumar" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தன்னை பற்றிய அவதூறு பதிவுகளை நீக்குங்கள்.. வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ஆர்த்தி ரவி..!