×
 

இது படமா.. சேகர் கம்முலா இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல..! குபேரா படம் குறித்து நடிகை சாய் பல்லவி கருத்து..!

குபேரா படம் குறித்து ஷாக்கிங் ரிவியூ கொடுத்து இருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், எல்.எல்.பி மற்றும் அமிகோ க்ரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பில், இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் நடிகர் தனுஷ், நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுடன் இணைந்து நடித்து உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. 


கிட்டத்தட்ட ரூபாய் 102 கோடி  பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஃபேன் இந்தியா படமாக வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டு காலமாக இத்திரைப்படம் எடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த படத்தை தரையில் காணும் மக்கள் அதனுடைய அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்கள். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப்படமாக இருக்கிறது.

இந்த சூழலில் இப்படத்தின் கதை என பார்த்தால், மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் நிரஞ், இந்தியாவில் எண்ணெய் வலத்தை கண்டு பிடிக்கிறார். பின்பு இதனை சரிக்கட்ட பல அரசியல் வாதிகளை தனது கைகளுக்குள் வைக்க நினைக்கிறார். இதில் அவர்களுக்கு பணத்தை பட்டுவாடா செய்ய நினைக்கும் வில்லன், ஏழு வருடங்களாக சிறையில் இருக்கும் நாகர்ஜூனாவை வெளியில் எடுத்து பணத்தை பரிமாற்றம் செய்ய திட்டம் தீட்டுகிறார். 


இதற்கு நாகர்ஜுனா திருப்பதியில் உள்ள பிச்சைக்காரர்களை தேர்வு செய்து அவர்களை குளிப்பாட்டி, அவர்களை பெரிய பணக்காரர்களை போல மாற்றி, அவர்கள் மூலமாக பணத்தை பட்டுவாடா செய்ய திட்டம் திட்டுகிறார்.  பின்னர் வேலை முடிந்த உடனே அவர்களை கொலை செய்ய முடிவு செய்கிறார். இதனை எப்படியோ தெரிந்து கொண்ட தனுஷ் அவர்களிடம் இருந்து தப்பித்து தனது உயிரை காப்பாற்ற போராடுகிறார். இதில் ராஷ்மிக்கா நாகர்ஜூனாவிடம் சிக்கி கொள்வதும் படத்தின் கடைசியில் தனுஷுடன் இணைந்து நாகர்ஜூனாவும் போராடுவதும் படத்தின் அட்டகாசமான காட்சிகளாக உள்ளது. கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய பிளாக் பாஸ்டர் படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: எனக்கு ஒரு முகம் இல்ல 100 முகம்.. தனது பயோபிக் படத்திற்கு பெயர் வைத்த சாய் பல்லவி..!

நடிகர் தனுஷ் வழக்கம் போல தனது அசூரத்தனமான நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார் எனவும் ரசிகர்கள் அவரை புகழ்ந்து வரும் இந்த வேளையில் தற்பொழுது அவருடன் மாரி படத்தில் நடித்த நடிகையான சாய் பல்லவி இப்படத்தை குறித்து தனது கருத்தை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார்.  அதன்படி, குபேரா படம் இவ்வளவு சிறப்பாக இருக்கபல காரணங்கள் இருக்கிறது. தனுஷின் நடிப்புத் திறமையும், அவரால் மட்டுமே இவ்வளவு சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க முடியும்.

அந்த நடிப்பின் பிரதிபலன் திரையில் தெரிகிறது. அவரை போலவே சேகர் கம்முலா இயக்கத்தில் நாகார்ஜுனாவை ஒரு கொலையாளி கதாபாத்திரத்தில் பார்ப்பது ஒரு விருந்தாக இருக்கும். இப்படத்தில் மிகவும் அழகாக இருக்கும் டியர் ராஷ்மிகா, இயக்குனர் சேகர் கம்முலா தனது பெண் கதாபாத்திரங்களை எவ்வளவு சக்திவாய்ந்ததாகவும், தனித்துவமாகவும் எழுதுகிறார் என்பது நமக்குத் தெரிமால் இல்லை. 

உண்மையில் இப்படத்தில் ரஷ்மிகாவுக்கு மறக்க முடியாத கதாபாத்திரமாக அமைந்துள்ளது. ராக் ஸ்டார் டிஎஸ்பி அவர்களே, உங்களின் தொடர்ச்சியான வெற்றிப் படங்களின் வரிசையில் இந்தப்படமும் அமைந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி. மேலும் படக்குழுவினரின் இத்தனை ஆண்டுகால உழைப்பு படத்தில் தெரிகிறது. நம்முடைய ஆசிய சினிமாவில் மிகவும் சுத்த இதயமுள்ள மனிதரான இயக்குனர் சேகர் கம்முலா இந்தத் தலைமுறையின் உத்வேகமே நீங்கள் தான். அதில் நானும் ஒருத்தி. எனது குரு மகிழ்ச்சியாகவும் உடல் நலத்துடனும் இதுபோல் பல கதைகளை எடுக்கவும் வாழ்த்துகிறேன். இன்று அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.  

இதையும் படிங்க: படத்தில் ராஷ்மிகா எங்கப்பா..! 'குபேரா' படத்தை இன்னும் பாக்கலையா அப்ப இத பாத்துட்டு போங்க..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share