×
 

மீண்டும் ஒரு நடிகை கடத்தல்..! சினிமாவை மிஞ்சிய சம்பவத்தின் பின்னணி.. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி..!

சீரியல் நடிகை சைத்ரா, கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெங்களூரில் கன்னட சின்னத்திரை உலகை மட்டுமல்லாது, சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவமாக நடிகை சைத்ரா கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் போலீசில் அளித்துள்ள புகார் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

பிரபல நடிகையாக அறியப்படும் சைத்ரா, தனது கணவரான தயாரிப்பாளர் ஹர்ஷவர்தன் தன்னை கடத்திச் சென்றதாக குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. இப்படி இருக்க சைத்ரா பெங்களூரை சேர்ந்தவர். கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை. இயல்பான நடிப்பு, எளிமையான தோற்றம் மற்றும் ரசிகர்களுடன் நெருக்கமான பழக்கம் ஆகியவற்றால் குறுகிய காலத்திலேயே சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவர், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வந்தார்.

நடிகை சைத்ராவுக்கும், கன்னட திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளரான ஹர்ஷவர்தனுக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடுகள் காரணமாக விரைவிலேயே அவர்களது உறவில் பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இளசுகளை டோட்டலா knockout செய்த நடிகை மிர்னா மேனன்..! ஷார்ட் உடையில் செம ஹாட் போஸ்..!

இதன் காரணமாக சைத்ரா தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு ஒரு வயதான பெண் குழந்தை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பரபரப்பான சம்பவம் தொடங்கிய நாள், சைத்ரா தனது வீட்டில் “மைசூருக்கு ஷூட்டிங்கிற்காக செல்கிறேன்” என்று கூறிவிட்டு சென்றதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். வழக்கமாக ஷூட்டிங் தொடர்பாக பயணம் செய்யும் நடிகை என்பதால், குடும்பத்தினருக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.

ஆனால், மைசூர் சென்றதாக கூறிய நேரத்திற்கு பிறகும், சைத்ராவிடமிருந்து எந்த தகவலும் வராததால் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். போன் அழைப்புகளுக்கும் பதில் வரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகை சைத்ராவை அவரது கணவர் ஹர்ஷவர்தனின் ஆட்கள் காரில் கடத்திச் சென்றதாக குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது குறித்து நடிகையின் சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரே தற்போது காவல்துறையினரிடையே தீவிர விசாரணைக்கு காரணமாகியுள்ளது. கடத்தப்பட்டதாக கூறப்படும் பல மணி நேரங்களுக்கு பிறகு, சைத்ரா எப்படியோ தனது ஒரு நெருங்கிய நண்பருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த அழைப்பில், தான் பாதுகாப்பாக இல்லை என்றும், கட்டாயமாக எங்கோ அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த நண்பர் உடனடியாக சைத்ராவின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நடிகை சைத்ராவின் சகோதரி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். சைத்ரா சென்றதாக கூறப்படும் வழித்தடங்கள், சிசிடிவி காட்சிகள், போன் லொக்கேஷன் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஹர்ஷவர்தன் நடிகை சைத்ராவின் தாயாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

அந்த அழைப்பில், “தங்களது ஒரு வயது பெண் குழந்தையை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தால் தான் சைத்ராவை விடுவிப்பேன்” என அவர் கூறியதாக குடும்பத்தினர் போலீசில் தெரிவித்துள்ளனர். இந்த தகவல், குழந்தைக்காக கணவரே நடிகையை கடத்தினாரா என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில், கணவன் – மனைவி இடையேயான பிரச்சினைகள், குழந்தை காவல் உரிமை தொடர்பான தகராறு ஆகியவை இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இருப்பினும், இதுவரை எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கன்னட சின்னத்திரை மற்றும் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக நடிகர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் நடிகை சைத்ராவின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நடிகை சைத்ராவை மீட்கவும், உண்மையான பின்னணியை கண்டறியவும் போலீசார் பல்வேறு சிறப்பு குழுக்களை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் ஹர்ஷவர்தன் மற்றும் அவரது தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: என்ன SK ரசிகர்களே ரெடியா..! நாளைய மறுநாள் சென்னை வள்ளுவர் கோட்டத்துக்கு வாங்க.. 'பராசக்தி' ட்ரீட் இருக்கு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share