கமல் வச்ச குறி தப்பல.. தக் லைஃப் படத்தை தொட்ட நீ கெட்ட.. கன்னட அமைப்புகளுக்கு போலீஸ் வார்னிங்..!
மன்னிப்பும் கேக்கல... சண்டையும் போடல...சட்ட ரீதியாக ஜெயித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
'குறி வச்சா இரை விழனும்' என ரஜினி சொல்லும் டயலாக்குகள் தற்பொழுது நடிகர் கமலஹாசனுக்கும் பொருந்தும் என பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு மொழி பிரச்சனையை காரணமாக வைத்து தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட விடாமல் பல அமைப்புகள் அச்சுறுத்தல்கள் கொடுத்து வந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் கொடுத்த தீர்ப்பு தற்பொழுது அவர்களுக்கே பாதகமாக மாறி இருக்கிறது.
அந்த வகையில் தக் லைஃப் திரைப்படம் என்ன தான் தமிழகத்தில் ஓடவில்லை என்றாலும், கன்னட மக்களுக்கு கமலஹாசன் மீது இருக்கும் அதீத பாசத்தால் அத்திரைப்படம் அங்கு ஓடிவிடும் என பட வெளியிட்டுக்கு முன்பாகவே மணிரத்தினம் கணித்த ஒரு விஷயம் தான். ஆனால் வலுக்கட்டாயமாக கன்னட நடிகர் சிவராஜ்குமாரை இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்து வந்த நடிகர் கமலஹாசன், தமிழிலிருந்து பிறந்த மொழி தான் கன்னடம் எனக் கூறியும் ஆதலால் நீர் எங்களில் ஒருவர் என சொன்ன ஒரே வார்த்தையால் இன்று படம் மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்திருக்கிறது. இதனைப் பார்த்த சில கன்னட அமைப்புகள், நீங்கள் எப்படி தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்திருக்கிறது என சொல்லலாம் என்று கண்டனத்தை தெரிவித்து வந்தனர். வேறு சிலர் கமலஹாசன் என்ன தமிழ் வல்லுனரா அவருக்கு மொழிகளைப் பற்றி என்ன தெரியும் எனவும் வசைப்பாடி திருத்தனர்.
இதையும் படிங்க: முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்துல டான்ஸ் ஆடுனது குத்தமா? - காது கூசும் கமெண்ட்ஸ்... ரஜினியால் கடுப்பான கமல் ஃபேன்ஸ்...!
இப்படிப்பட்டதான சூழலில் தமிழில் திரைப்படம் சரியாக ஓடவில்லை என்பதால் மணிரத்தினம் கன்னடத்தில் ஆவது திரைப்படத்தை ஓட வைத்து எப்படியாவது வசூலை ஈட்டிவிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார். அதற்காக கர்நாடக நீதிமன்றத்தை அணுகிய அவரது தரப்பு, தியேட்டரில் இத்திரைப்படத்தை வெளியிடும்பொழுது ஒரு சில அமைப்புகள் தியேட்டரை கொளுத்துவோம் எரிப்போம் என பல எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். இந்த அச்சுறுத்தல்கள் இருந்தால் எப்படி மக்கள் படம் பார்க்க வருவார்கள் என்று கூறி இத்திரைப்படத்தை வெளியிடும் பொழுது பலத்த போலீஸ் பாதுகாப்பு எங்களுக்கு அளிக்க வேண்டும் என அனுமதி கேட்டு இருந்தனர்.
ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொண்ட அமர்வோ கமலஹாசன் எதற்காக அந்த வார்த்தையை கூறினார். கண்டிப்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே நாங்கள் திரைப்படத்தை வெளியிட அனுமதிப்போம் என நீதிபதிகளே சொன்னதால் அனைவரும் ஷாக் ஆகி நின்றனர். சரி... இனி இந்த விஷயத்தை உள்ளூரிலே ஹாண்டில் பண்ணினால் சரி வராது என நினைத்த மணிரத்தினம் தனக்குத் தெரிந்த ஒருவரை தூண்டி விட, அவர் சுப்ரீம் கோர்ட்டில் இதற்கு உண்டான வழக்கை தொடர்ந்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கமலஹாசன் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்.. இல்லையெனில் படத்தை திரையிட முடியாது என்று சொல்ல உயர்நீதிமன்றத்திற்கு யார் அனுமதி கொடுத்தது? என்று காட்டமாக கேள்வி எழுப்பினர்.
அதுமட்டுமல்லாது மொழி பிரச்சனைகளை மீண்டும் கொண்டு வந்து பலரை அழிக்க வேண்டும் என்பது தான் அந்த அமைப்பின் திட்டமா எனவும் பலதரப்பட்ட கேள்விகளை கேட்டு வழக்கறிஞர்களை திக்குமுக்காட வைத்தனர் நீதிபதிகள். அதுமட்டுமல்லாமல் தக் லைஃப் திரைப்படத்திற்கு இவ்வளவு பாரபட்சம் காமிக்கும் நீங்கள் படத்தை வெளியிட்டால் தியேட்டரை கொளுத்துவோம்... திரையிட விடமாட்டோம்... மக்களை அடித்து உதைப்போம் என்று சொல்லுகின்ற அச்சுறுத்தல் அமைப்புகள் மீது கர்நாடக மாநில அரசாங்கம் என்ன நடவடிக்கை இதுவரை எடுத்திருக்கிறது என்பதை கூறுங்கள் என சவுக்கடி கேள்விகளை கேட்டதால் வேறு வழி இல்லாமல் சரண்டராய் இருக்கின்றனர் கன்னட அரசியல் அமைப்புகள்.
அதற்கு உதாரணமாகத்தான் நேற்றைய தினம் கர்நாடக துணை முதல்வரான டி.கே.சிவக்குமார். "நம் கர்நாடக மாநிலம் ஒரு அமைதியான மாநிலம் என்பதை நீங்கள் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். கண்டிப்பாக கமலஹாசனின் வழக்கில் நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவை நாம் கடைபிடிக்க வேண்டும் மதிக்கவும் வேண்டும். ஆதலால் கன்னட அமைப்புகள் அனைவருக்கும் இந்த நேரத்தில் வேண்டுகோள் ஒன்றை வைக்கிறேன். உங்களது வரம்புகளை மீறி எந்த விஷயத்தையும் நீங்கள் செய்யக்கூடாது. அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். சட்டத்தை நீங்கள் கையில் எடுத்துக் கொண்டால் அப்பொழுது எங்களுக்கு என்ன வேலை" என்று பேசி இருந்தார். இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட அனுமதி வழங்கி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் போலீசார் பாதுகாப்பு அளிக்கவும் அனுமதி வழங்கி இருக்கின்ற இந்த வேளையில் தக்கலைப் திரைப்படம் பெங்களூரில் வெளியிடப்பட இருப்பதால் அசம்பாவிதங்களை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் காவல்துறையினர்.
இதற்கான முதற்கட்ட பணிகளாக கன்னட அமைப்புகளின் தலைவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசை அனுப்பி வருகின்றனர். முதலாவதாக கன்னட ரக்ஷனா வேதிக்கு அமைப்பின் தலைவரான 'பிரவீன் ஷெட்டிக்கு' எந்த அசம்பாவிதங்களும் செய்யக்கூடாது என எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும் அந்த நோட்டீசில், ' பெங்களூரில் தக்கலைப் திரைப்படம் வெளியிடப்படும் பொழுது தியேட்டருக்கு முன்பாக போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. அப்படி நீங்கள் போராட்டம் செய்ய விரும்பினால் பெங்களூரில் உள்ள சுதந்திரப் பூங்காவில் மட்டுமே போராட்டத்தை நடத்த அனுமதி இருக்கிறது. மேலும் சட்டத்திற்கு எதிராக வேறு எங்கும் போராட்டம் நடத்த அனுமதி இல்லை. மீறினால் கைது செய்யப்படுவீர்கள். சட்ட ஒழுங்கை பாதுகாக்கவே இது போன்ற நடவடிக்கைகள் தொடரப்படுகிறது என்பதை கேட்டுக்கொள்கிறோம்' என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் என்னதான் பிரவீன் ஷெட்டியை சந்தித்து போலீசார் எச்சரிக்கை நோட்டீசை கொடுத்தாலும் அதனை அவர் வாங்க மறுத்து இருக்கிறார். இதனால் வேறு வழி இன்று பெங்களூரில் உள்ள அவரது வீட்டிற்கே நேரடியாக சென்ற போலீசார் அவரது வீட்டிற்கு முன்பாக இந்த நோட்டீசை ஒட்டி வைத்துள்ளனர். இதனைப் பார்த்து மிகவும் கடுப்பான பிரவீன் செட்டி, இது குறித்து பேசும் பொழுது தக் லைஃப் படம் தியேட்டரில் வெளியாகும் பொழுது யாராவது தியேட்டருக்கு தீ வைத்தாலோ அல்லது கல்வீசி தாக்குதல் நடத்தினாலோ அதற்கு நான் எந்த பொறுப்பையும் ஏற்க முடியாது' என கூறியுள்ளார்.
மேலும் இவரைத் தொடர்ந்து கன்னட அமைப்புகளில் முக்கியமான பல தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் வீடுகளுக்கும் நேரடியாக சென்று போலீசார் எச்சரிக்கை நோட்டீசை வழங்கி வருகின்றனர். இதனைப் பார்த்த நெட்டிசங்கள் ஏலே....கமலஹாசன் வச்ச குறி தப்பாவே இல்லை... மன்னிப்பு கேட்காமலே சட்ட போராட்டத்தில் ஜெயித்திருக்கிறார் கமலஹாசன் என அவரை பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: மலையாள பிட்டு படங்களுடன் என்னை வச்சு பேசுறாங்க..! சினிமாவும் வாழ்க்கையும் ஒன்னா.. நடிகை திரிஷா அப்செட்..!