மீண்டும் மணிரத்தினம் - STR காம்போ..! அடுத்த அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்..!
மணிரத்தினம் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் நடிகர் சிம்பு.
தற்பொழுது மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படி இருக்க, இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படி இருக்க, இந்த படத்திற்கான ப்ரமோஷன்கள் அதிகமாக செய்யப்பட்டு வரும் வேளையில் இப்படத்திற்கான இசை வெளியிட்டு விழா சமிபத்தில் நடைபெற்றது.
அந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனை குறித்து பேசிய கன்னட நடிகர் சிவராஜ்குமார், தனக்கு கமலை எந்த அளவிற்கு பிடிக்கும் என்றால் அவர் ஒருமுறை என்னை கட்டியணைத்ததற்காகவே மூன்று நாட்கள் குளிக்காமல் இருந்தேன். அந்த அளவிற்கு எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்றார். அந்த வகையில் கமலை எந்த அளவுக்கு பிடிக்கும் என்பதை வெளிப்படையாக பேசியிருந்தார் சிவராஜ்குமார்.
இதையும் படிங்க: வெளியானது சிம்புவின் "ஓ மாறா" பாடல்..! ரசிகர்களை உற்சாகப்படுத்திய தக் லைஃப் பட சாங்..!
அவரை தொடர்ந்து பேசிய நடிகர் சிம்பு மணிரத்தினத்தை குறித்து பேசினார். அவர் பேசுகையில், இயக்குனர் மணிரத்தினம் சாரை பற்றி சொல்ல வேண்டுமானால் உங்களுக்கு தெரியாத அற்புதமான விஷயம் ஒன்று உள்ளது. என்னவெனில் 1990-ம் ஆண்டு அனைவரும் வியக்கும் வகையில் 'அஞ்சலி' என்ற படத்தை இயக்கி இருந்தார். அந்தப் படத்தில் சின்ன பசங்க நடிச்சிருப்பாங்க, முக்கியமாக அஞ்சலி பாப்பாவுக்கு அண்ணனாக தெலுங்கு நடிகர் ஒருவர் நடித்திருப்பார்.
அந்தப் படத்தைப் பார்த்ததிலிருந்து நான் தேம்பி... தேம்பி... அழ ஆரம்பித்து விட்டேன். அதன் பின், மனசு தாங்காமல் என்னுடைய அப்பாவிடம் சென்று ஏன் மணி சார் இந்த படத்துக்கு என்னை கூப்பிடவே இல்லை. நானும் இதே வயசு தானே, இப்படி ஒரு படத்தில் என்னை ஏன் அவர் நடிக்க வைக்கவில்லை என கேட்டேன். அதற்கு என்னுடைய அப்பா, அந்தப் படத்திற்கு ஏற்றவாறு அவர்களின் கதாபாத்திரம் பொருந்தி இருக்கும், இல்லை என்றால் வேறு ஏதாவது முக்கியமான காரணம் இருந்திருக்கும். நீ சின்ன பையனா இருக்கிறதால உனக்கு இது புரியல என சொல்லி என்னை ஆறுதல் படுத்தினார். அந்த சமயத்துல நான் ஒன்று நினைத்தேன் மணி சாருக்கும் நமக்கும் செட்டாகாது போல அதனால அவரு இனி நம்மளை கூப்பிட மாட்டாரு. அதனாலயே வளர்ந்த பின்பு நிறைய மாஸ் படங்களில் நடித்து ஹிட் கொடுத்தேன்.
ஆனால் சில நேரங்களில் என் மீது "ரெகார்ட்" விழுந்த பொழுது என்னை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் பயந்தார்கள். இந்த ஒரு காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு பல டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் என்னை நிராகரித்தார்கள். அப்பொழுது மெட்ராஸ் ராக்கர்ஸ்-ல் இருந்து எனக்கு ஒரு போன் கால் வந்தது. அந்த போன் காலுக்கு பின்பாக நான் மணிரத்தினம் சாரை நேரில் சென்று பார்த்தேன். அப்பொழுது அவரைப் பார்த்து உண்மையிலேயே நீங்க தான் என்னை கூப்பிட்டீங்களான்னு கேட்டேன். அவர் கொடுத்த வாய்ப்புகளால் இன்று நான் நின்று கொண்டிருக்கிறேன். ஏனெனில் அப்பொழுது அவர் தான் சொன்னார் இந்த பையனை நம்பி நாம் படம் எடுக்கலாம் என சொன்னார். அவரை ஒரு பொழுதும் நான் மறக்க மாட்டேன். 'செக்கச் சிவந்த வானம்' படம் மட்டுமல்ல எல்லா படத்திலும் மணிசார் முதன்முதலாக என்னை கூப்பிட்டு கதை சொல்லி விடுவார் என அவரை குறித்து பெருமையாக பேசினார்.
தற்பொழுது அவர் தெரிவித்ததை போல் மீண்டும் தான் இயக்க இருக்கும் படத்தில் நடிகர் சிம்புவை நடிக்க வைக்க இருக்கிறார் இயக்குநர் மணிரத்தினம். மேலும் சிம்பு நடிக்க இருக்கும் இப்படத்தில் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் படத்தின் நடிகை ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தக் லைஃப் படத்திற்கு அமோக வரவேற்பு..! ப்ரீ புக்கிங்கில் சாதனை..!