×
 

சிம்புவை அழவைத்த இயக்குனர் மணிரத்தினம்..! ஆறுதல் படுத்திய டி.ராஜேந்திரன்..!

ஒரே படத்தை பார்த்து கதறி அழுதுள்ளார் நடிகர் சிலம்பரசன். 

தமிழ் திரையுலகில் "STR" ஆகவும் "லிட்டில் சூப்பர் ஸ்டாராகவும்" வலம் வருபவர் தான் நடிகர் சிலம்பரசன். சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் உள்ள இவர், பல படங்களில் நடித்து இளசுகளின் மனதை வென்றவர். இப்படி பல படங்களில் நடித்த சிம்பு, சரியாக ஷூட்டிங்கிற்கு வரமாட்டார் எனவும் நேரத்தை கடைபிடிக்க மாட்டார் எனவும் சினிமா வட்டாரத்தில் பலராலும் பேசப்பட்டதால் சில காலங்கள் படவாய்ப்பு கிடைக்காமல் விரக்தியில் இருந்தார்.  பின், நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுத்து இளைஞர்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்தார். பின் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது உடல் எடையை குறைத்து, மாநாடு படத்தில் மாஸ் காமித்தார். 

இந்த வகையில் பல தோல்விகளையும் வெற்றிகளையும் கணிசமாக தனது வாழ்க்கையில் பார்த்த சிம்பு, இதுவரை காதல் அழிவதில்லை, அலை, தம், குத்து, கோவில், மன்மதன், தொட்டி ஜெயா, வல்லவன், சரவணா, காளை, சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, கோவா, வானம், ஒஸ்தி, போடா போடி, கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலு, காக்கா முட்டை, அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசாராதவன் அடங்காதவன், காற்றின் மொழி, செக்கச்சிவந்த வானம், 90 ML, மாநாடு, ஈஸ்வரன், மஹா, பத்து தல, தக் லைஃப் போன்ற படங்களில் நடித்து உள்ளார். 

இதையும் படிங்க: நடிகர் சிம்புவை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்... என்ன சொன்னார் தெரியுமா..?

இந்த சூழலில், மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படி இருக்க, இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படி இருக்க, இந்த படத்திற்கான ப்ரமோஷன்கள் அதிகமாக செய்யப்பட்டு வரும் வேளையில் இப்படத்திற்கான இசை வெளியிட்டு விழா சமிபத்தில் நடைபெற்றது. 

அதில் பேசிய நடிகர் சிம்பு, இயக்குனர் மணிரத்தினம் சாரை பற்றி சொல்ல வேண்டுமானால் உங்களுக்கு தெரியாத அற்புதமான விஷயம் ஒன்று உள்ளது. என்னவெனில் 1990-ம் ஆண்டு அனைவரும் வியக்கும் வகையில் 'அஞ்சலி' என்ற படத்தை இயக்கி இருந்தார். அந்தப் படத்தில் சின்ன பசங்க நடிச்சிருப்பாங்க, முக்கியமாக அஞ்சலி பாப்பாவுக்கு அண்ணனாக தெலுங்கு நடிகர் ஒருவர் நடித்திருப்பார். அந்தப் படத்தைப் பார்த்ததிலிருந்து நான் தேம்பி... தேம்பி... அழ ஆரம்பித்து விட்டேன். அதன் பின், மனசு தாங்காமல் என்னுடைய அப்பாவிடம் சென்று ஏன் மணி சார் இந்த படத்துக்கு என்னை கூப்பிடவே இல்லை. நானும் இதே வயசு தானே, இப்படி ஒரு படத்தில் என்னை ஏன் அவர் நடிக்க வைக்கவில்லை என கேட்டேன். அதற்கு என்னுடைய அப்பா, அந்தப் படத்திற்கு ஏற்றவாறு அவர்களின் கதாபாத்திரம் பொருந்தி இருக்கும், இல்லை என்றால் வேறு ஏதாவது முக்கியமான காரணம் இருந்திருக்கும். நீ சின்ன பையனா இருக்கிறதால உனக்கு இது புரியல என சொல்லி என்னை ஆறுதல் படுத்தினார்.

அந்த சமயத்துல நான் ஒன்று நினைத்தேன் மணி சாருக்கும் நமக்கும் செட்டாகாது போல அதனால அவரு இனி நம்மளை கூப்பிட மாட்டாரு. அதனாலயே வளர்ந்த பின்பு நிறைய மாஸ் படங்களில் நடித்து ஹிட் கொடுத்தேன். ஆனால் சில நேரங்களில் என் மீது "ரெகார்ட்" விழுந்த பொழுது என்னை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் பயந்தார்கள். இந்த ஒரு காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு பல டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் என்னை நிராகரித்தார்கள். அப்பொழுது மெட்ராஸ் ராக்கர்ஸ்-ல் இருந்து எனக்கு ஒரு போன் கால் வந்தது. அந்த போன் காலுக்கு பின்பாக நான் மணிரத்தினம் சாரை நேரில் சென்று பார்த்தேன். அப்பொழுது அவரைப் பார்த்து உண்மையிலேயே நீங்க தான் என்னை கூப்பிட்டீங்களான்னு கேட்டேன். 

அவர் கொடுத்த வாய்ப்புகளால் இன்று நான் நின்று கொண்டிருக்கிறேன். ஏனெனில் அப்பொழுது அவர் தான் சொன்னார் இந்த பையனை நம்பி நாம் படம் எடுக்கலாம் என சொன்னார். அவரை ஒரு பொழுதும் நான் மறக்க மாட்டேன். 'செக்கச் சிவந்த வானம்' படம் மட்டுமல்ல எல்லா படத்திலும் மணிசார் முதன்முதலாக என்னை கூப்பிட்டு கதை சொல்லி விடுவார். அதேபோல தான் 'பொன்னின் செல்வன்' படத்திற்கும் என்னை அழைத்து கதைகளை கூறினார். ஆனால் ஒரு சில காரணங்களால் என்னால் அதில் நடிக்க முடியவில்லை. அதன் பின்பு தக்லைஃப் படத்துக்கு என்னை கூப்பிட்டார் ஆனால் சில காரணங்களால் என்னால் அப்படத்தில் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் மீண்டும் அதே வாய்ப்பு என்னை தேடி வந்தது. ஆனால் அது சாதாரணமாக வரவில்லை கமல் சார் கூட வந்தது.

ஆதலால் இந்த நேரத்தில் கமல் சாருக்கும் மணிரத்தினம் சாருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படி ஒரு அரிய விதமான கேரக்டரை எனக்கு கொடுத்ததற்காக உங்கள் இருவரையும் என் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன் என்றார்.

இதையும் படிங்க: Trisha Photos: சுகர் பேபியாக மாறி... வெள்ளை புடவையில் சூடேற்றிய த்ரிஷா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share