அரசியல் செய்ய தனி அறிவு வேண்டும்.. அதெல்லாம்.. நடிகர் விஜய் ஆண்டனி பரபரப்பு பேச்சு..!
அரசியல் வருகை குறித்து விஜய் ஆண்டனி தெரளிவாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான "இடிச்ச பச்சரிசி, நாக்க முக்க, உசுமுலாரசே" போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனிதில் நீங்கா இடம் பிடித்த பாடலாக உள்ளது. இந்த பாடல்களுக்கு சொந்த காரர் என்றால் அவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் வளர்ந்து வரும் நடிகராகவும் உள்ளார். இவரது நடிப்பில் வந்த படங்கள் அனைத்தும் ஒருவித கருத்தை முன்வைத்ததாக இருக்கும்.
அதனாலேயே இவரது படங்களை பார்க்க ஒரு கூட்டம் ஆவலாகவே உள்ளது. படத்தில் எப்படி கலக்குவாரோ அதே போல் பாடுவதிலும் பாடலை உருவாக்குவதிலும் வல்லவர் என்றே சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் இதுவறை விஜய் ஆண்டனி படங்கள் என பார்த்தால் சலீம், இந்தியா பாக்கிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், அண்ணாதுரை, எமன், காளி, திமிரு புடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன், கொலை, பிச்சைக்காரன் 2, தமிழரசன், ரத்தம், ஹிட்லர், ரோமியோ, வள்ளி மயில், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது பாடலில் எப்படி வித்தியாசங்கள் உள்ளதோ அதே போல் இவரது படத்தின் டைட்டில்களும் வித்தியாசமானவையே.
இதையும் படிங்க: திகில் கிளப்பும் விஜய் ஆண்டனியின் "மார்கன்"..! படத்தின் முதல் 6 நிமிட வீடியோவால் அரண்டு போன ரசிகர்கள்..!
இவர் படத்தில் நடிப்பதிலும், இசையமைப்பதிலும், தயாரிப்பதிலும், எடிட் செய்வதிலும் எந்த அளவிற்கு ஃபேமஸோ அதே அளவிற்கு அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவதிலும் ஃபேமஸ். பின்பு அதற்கு விளக்கம் கொடுப்பதிலும் ஃபேமஸ் ஆனவர். இப்படி இருக்க தற்பொழுது மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட் செய்து தற்பொழுது இயக்குனராக மாறி இருக்கும் லியோ ஜான் பால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க க்ரைம் திரில்லர் படமாகவே உருவாக்கப்பட்ட இப்படம் ஜூன் மாதம் 27ம் தேதியான நாளை வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான முதன் 6 நிமிட காட்சிகளை வெளியிட்டுள்ளது படக்குழு. அந்த காட்சிகளில், " ஒரு பெண்ணை பின்தொடரும் கொலையாளி அவரது கழுத்தில் ஒரு வகையான மருந்தை ஊசி மூலமாக செலுத்த அவர் மறித்து போகிறார். அவரது உடலை குப்பை தொட்டியில் இருந்து கண்டெடுக்கின்றனர் போலீசார். மேலும் இறந்து போன பெண்ணின் உடல் முழுவதும் கருமை நிறமாக மாறி இருப்பதால் என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போய் இருக்கின்றனர். பின்பு இது தொடர்பாக விஜய் ஆண்டனியிடம் பேசப்படுகிறது. பின்பு இந்த வழக்கில் அவர் தலையிடுகிறார். இந்த காட்சிகளை கண்ட மக்கள் இப்படத்தை காண தற்பொழுது ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிலையில், மதுரையில் மார்கன் திரைப்பட விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனியிடம் நீங்கள் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, " பல படங்களில் நடித்து இசையமைத்து தற்பொழுது பிரபலம் ஆகிவிட்டேன் என்பதற்காக எல்லாம் நான் அரசியலுக்கு வர முடியாது. உண்மையில் எனக்கு அரசியல் பற்றிய அறிவு கிடையாது. தற்பொழுது எனக்கு 50 வயது ஆகிவிட்டது, இனிமேல் அதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமும் எனக்கு துளிகூட இல்லை, அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு நல்லது செய்ய நான் நினைத்தாலும் அதை நானாகவே செய்கிறேன். அதனை அரசியல் வடிவில் செய்ய எனக்கு விருப்பம் இல்லை" என கூறியுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், உங்கள் நேர்மையையும் தைரியத்தையும் பாராட்டுகிறோம் ஆனால் இன்று பேசிவிட்டு நாளைக்கு மாற்றி பேசாமல் இருந்தால் சரி என்கின்றனர்.
இதையும் படிங்க: எஸ்கேவின் 'பராசக்தி' பட டைட்டிலை கொடுக்க இதுதான் காரணம்..! உண்மையை உடைத்த விஜய் ஆண்டனி..!