ரூ.21 கோடி அப்பீட்டு.. ஆப்பு வைத்த நீதிபதி.. அரண்டு போன விஷால்.. இனி ஆட்டம் இவங்க கையில தான்..!
பணம் பத்தும் செய்யும்... விஷாலுக்கு பதினொன்னா செஞ்சிடிச்சி, நீதிபதி உத்தரவால் செய்வதறியாது நிற்கிறார் நடிகர் விஷால்.
தமிழ் திரையுலகில் "நானும் மதுர காரன் தாண்டா" என சொல்லி மக்கள் மத்தியில் அதிகம் ஃபேமஸ் ஆனவர் தான் நடகர் விஷால். அவரது படங்களில் தாமிரபரணி, சண்டைக்கோழி படங்களை யாராலும் மறக்க முடியாது. அப்பொழுதே மக்கள் மனதில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த விஷால், அடுத்தடுத்து தனது நடிப்பால் பல இளசுகளின் மனதை கவர்ந்தார். அதுமட்டுமல்லாமல் இவர் பார்க்க கருமையாக இருந்தாலும் உடல் வலிமையில் ஜைஜான்டிக்காக இருந்தாலும் மனதளவில் ஒரு குழந்தை என்றே சொல்லலாம்.
முன்னணி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான ஜி. கே. ரெட்டி என்பவரின் மகனான விஷால் தனது கல்லூரி படிப்பை முடித்ததும் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரரும் அவரை படத்தில் நடிக்க வைக்க விரும்பினர், அதனால் சினிமா துறையில் கால் வைத்த விஷால் முதலில், நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் பணியாற்றி சினிமாவின் நுணுக்கங்களை கற்று கொண்டார். அதன் பின், செல்லமே படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்க உடனே நடிப்பிற்கான பயிற்சியை பெற்று அந்த படத்தில் நடித்தார். அந்த படமும் ஹிட் அடிக்க அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: விஷாலுக்கு கிடைத்த பெண் தேவதை..! அழகிய நடிகையை கரம்பிடிக்க போகிறார் ஆக்ஷன் ஹீரோ..!
மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பொழுது அவரது ஆர்.கே. நகர் தொகுதியில் தைரியமாக போட்டியிட்டார். இது அந்த சமயத்தில் பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இந்த சூழலில் தற்பொழுது தமிழ் சினிமா சங்கக்கத்தில் தலைவராக உள்ளார் நடிகர் விஷால். இப்படி இருக்க, இதுவரை தமிழ் திரையுலகில், செல்லமே, சண்டக்கோழி, சிவப்பதிகாரம், டிஷ்யூம், திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, வெடி, அவன் இவன், சமர், தீயா வேலை செய்யணும் குமாரு, பட்டத்து யானை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஆம்பள, பாயும் புலி, தாக்க தாக்க, கதகளி, மருது, கத்திச்சண்டை, துப்பறிவாளன், இரும்பு திரை, சண்டகோழி 2, ஆக்ஷன், அயோக்யா, எனிமி, சக்ரா, லத்தி, வீரமே வாகை சூடும், மார்க் ஆண்டனி, ரத்னம், நாளை நமதே, துப்பறிவாளன் 2, மத கஜ ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஷால் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், ஆகஸ்ட் மாதம், சினிமா சங்கத்தின் கட்டடத் திறப்பு விழா நடைபெறும் என்றும் அதற்கு பின்பாக தன்னுடைய திருமணம் நடைபெறும் எனவும் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில், இயக்குனர் கௌதம் கிருஷ்ணா இயக்கத்தில் சாய் தன்ஷிகா கதாநாயகியாக நடித்து உருவாகியுள்ள படம் தான் 'யோகி டா'. இப்படத்திற்கான ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஷால், நானும் தன்சிகாவும் பல வருடங்களாக காதலித்து வருகிறோம் விரைவில் திருமணம் செய்ய உள்ளோம் என தெரிவித்தார்.
அவரைப் போல் பேசிய நடிகை தன்ஷிகா, விஷாலைப் பார்த்து, 'என்ன..? பேபி சொல்லிடலாமா' எனக் கூறிவிட்டு, தானும் விஷாலும் காதலிப்பதாகவும், தன்னுடைய எல்லா கஷ்டமான சூழ்நிலைகளிலும் அவர் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும், உண்மையில் அவருடைய குணம் குழந்தைத்தனமானது என்றும் முதலில் நண்பர்களாக பேச ஆரம்பித்த நாங்கள் காலப்போக்கில் எங்கள் மனதை ஒருவருக்கொருவர் பறிகொடுத்துக்கொண்டோம் என தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி எங்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது என கூறி இனிப்பான செய்தியும் கொடுத்துவிட்டு சென்றார்.
இப்படி இருக்க, சில வருடங்களுக்கு முன்பு, நடிகர் விஷால் தனக்கு சொந்தமாக வைத்திருக்கும் 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. செலுத்திய பின் இனி விஷால் நடிக்கும் எந்த படமாக இருந்தாலும், அவரது நிறுவனத்தின் மூலமாக வெளியாகும் படங்களின் உரிமையானாலும் அனைத்தும் கடன் தொகையை அவர் திருப்பி செலுத்தும் வரை, படத்தின் உரிமையை லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் இதனையும் மீறி விஷால் படங்களை வெளியிட்டு லாபம் பார்த்ததால், டென்ஷானான லைகா நிறுவனர், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய விஷாலுக்கு உத்தரவிட்டது. ஆனால் அவர் செலுத்தவில்லை.
இதனை அடுத்து, இந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பணத்தை முறையாக செலுத்தாததாலும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததாலும், நேரில் ஆஜரான விஷாலுக்கு உயர் நீதிமன்றம் வாயிலாக கண்டனம் தெரிவித்தார். பின்பு, விஷால் தாக்கல் செய்த அவரது சொத்து கணக்கில், அவரிடம் மூன்று கார்கள், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் கடனில் உள்ள வீடு தான் இருப்பதாகவும் தனது வங்கி கணக்கையும் காண்பித்தார்.
இதனை பரிசீலித்து பார்த்த நீதிபதி, லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் அவர்களுக்கு வழங்க வேண்டும் மற்றும் வழக்குச் செலவு தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இனி நான் தனி ஆளில்ல.. எனக்குன்னு மனைவி வரப் போறாங்க - விஷால் கொடுத்த கல்யாண அப்டேட்..!