ஒரே அடியில் மனைவியின் வாயை உடைத்த விஷ்ணு குமார்..! கர்மாஸ் பூமராங்கில் நடந்தது என்ன..?
பெண் வன்கொடுமைக்கு எதிராக பேசியவர் இன்று அதே வழக்கில் சிக்கி இருப்பது சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
எப்பொழுதும் பெண்களுகு எதிரான வன்கொடுமைகளை குறித்து பேசி வேதனைபடும் இன்ஸ்டாகிராம் பிரபலமான விர்சுவல் வாரியர் விஷ்ணுகுமாரே தனது மனைவியின் வாய்த்தாடையை அடித்து உடைத்தார் என்ற செய்திரை கேட்ட பல பெண்கள் அவரை வசைபாடி வருகின்றனர். யார் இந்த விர்சுவல் வாரியர் விஷ்ணுகுமார் என பார்த்தால் இவர் தான் இன்ஸ்டாகிராமில் பெண்களுக்கு நடக்கும் அனைத்து அநீதிகளுக்கும் குரல் கொடுத்து வந்த பிரபலம் அதனை விட சமீபத்தில் தனது நண்பனின் தங்கைக்கு பாலியல் ரீதியாக இன்ஸ்ட்டாவில் தொல்லை கொடுத்து அடி வாங்கி பேமஸ் ஆனவர். இப்படிப்பட்ட மகான் தற்பொழுது தனது மனைவியை அடித்து கொடுமை படுத்தி இருப்பதாக கூறப்பட்ட புகாரில் போலீசின் பிடியில் சிக்கி தவித்து வருகிறார்.
இப்படிப்பட்ட இவரது மனைவி யார் என பார்த்தால், 'கருங்காலி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான அஷ்மிதா நீல மேகம் தான். இப்பொழுது இவர் அழகு கலை நிபுணராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். மேலும் 'அஸ்மிதா மேக்ஓவர் ஆர்டிஸ்ட்ரி' என்ற பெயரில் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். இப்படி இருக்க, அஷ்மிதா, இன்ஸ்டாகிராம் பிரபலமான விர்சுவல் வாரியர் விஷ்ணுகுமாரை திருமணம் செய்து விருகம்பாக்கம் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி இவரது கணவர் விஷ்ணு தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு, நண்பரின் சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி தாக்கப்பட்டார். அது இணையத்தில் வைரலானது.
இதையும் படிங்க: அவர் தான் முதலில் ப்ரபோஸ் பண்ணாரு..! பொதுவெளியில் காதலை உடைத்த ராஷ்மிகா மந்தனா..!
இதனை தொடர்ந்து அஷ்மிதா போலீசாரிடம் விஷ்ணுவிற்கு எதிராக புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், " கடந்த மார்ச் மாதம் 20- ம் தேதி எனக்கும் என் கணவருமான விஷ்ணுவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இப்படி நாங்கள் இருவரும் வாக்குவாதம் செய்தபடியே, காரில் கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது, கத்திபார மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென காரை நிறுத்திய அவர், காருக்குள் வைத்தே மிகவும் கொடுமையாக என்னை தாக்கினார். அவர் தாக்கியதில் என் முகத்தாடை கிழிந்து பற்கள் உடைந்தது. வலிதாங்க முடியாமல் இருந்த என்னையும் என் குழந்தையையும் கொலை செய்ய முயன்றார். அதுமட்டுமல்லாமல் என்னை ஒரு கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்கினார். இதனை அடுத்து ஒரு நாள் நள்ளிரவில், அவரது கைபேசியை எடுத்து பார்த்தபோது அதில் என் கணவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது எனக்கு தெரியவந்தது. அந்த பெண்களுடன் தவறான உறவில் இருப்பதையும் வீடியோ எடுத்து இருந்ததை பார்த்த உடனே எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை.
பின்பு கடந்த மே மாதம் 5-ம் தேதி விஷ்ணுவையும் அவரது அம்மாவையும் பெங்களூரு போலீசார் கடன் மோசடி வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்பொழுது அங்கிருந்து செல்போன் வாயிலாக என்னை தொடர்பு கொண்ட விஷ்ணு, அழுதபடி ரூபாய் 37 லட்சத்தை திருப்பி கொடுத்தால் தன்னை வெளியே விடுவதாக சொல்கிறார்கள். ஆதலால் முடிந்த வரை பணம் பெற்று தரும்படி என்னிடம் கெஞ்சி கேட்டார். இதனால் மனமுருகி வேறுவழியின்றி எனது அம்மாவின் வங்கியில் உள்ள பணத்தையும், எனது கணக்கு இருக்கும் வங்கியிலும் கடன் பெற்று அவருக்கு அனுப்பி அவரை அந்த வழக்கில் இருந்து காப்பாற்றினேன்.
ஆனால் இப்படி நமக்காக உதவி செய்தாலே என்ற நன்றி உணர்வு துளிகூட இல்லாமல் மதுபோதைக்கு அடிமையாகி இணையதளத்தில் என்னையும் எனது குடும்பத்தையும் குறித்து கேவலமாக பேசிவருகிறார். அதுமட்டுமா.. கடந்த 8-ம் தேதி எனது 3-வது குழந்தையை நான் பெற்றெடுத்த நிலையில் தினமும் மது போதையில் வந்து தன்னை அடித்து உதைத்து துன்புறுத்துவதாக கணவர் விஷ்ணுகுமார் மற்றும் அவருக்கு உடைந்தையாக உள்ள அவரது அம்மா ஆனந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அஷ்மிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை அடுத்து, அவர் கொடுத்த புகாரின் பெயரில் பெண் வன்கொடுமை, மோசடி, கொலை மிரட்டல், கொலை முயற்சி மற்றும் சமூக வலைதளத்தில் பொய்யான தகவல்களை தொடர்ந்து பரப்புதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விஷ்ணுகுமாரை கைது செய்து தற்பொழுது விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பர்த்டே ட்ரீட் கொடுக்கப்போகும் விஜய்.. ஜூன் 22ல்.. ரிலீசாகிறது "ஜன நாயகன்" பட முதல் பாடல்..!