டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!!
டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் திகில் திரைப்படமான டிமான்டி காலனி 3, அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் வெளியீட்டிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் விஜயா சுப்பிரமணியன் போட்ட ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் விஜயா சுப்பிரமணியனும் திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகம் தொடர்பாக ஒப்பந்தம் செய்திருந்தனர். அந்த ஒப்பந்தத்தின்படி டிமான்டி காலனி 2 மற்றும் அதன் தொடர்ச்சியான பாகங்களான டிமான்டி காலனி 3, டிமான்டி காலனி 4 உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களையும் இரு தரப்பினரும் பங்குதாரர்களாக உள்ள நிறுவனத்தின் மூலமாகவே தயாரித்து வெளியிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்தது. இதன்படி இரு தரப்பும் இணைந்து படங்களை உருவாக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக இருந்தது.
இருப்பினும் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனக்குத் தெரியாமலேயே டிமான்டி காலனி 3 படத்தை பேஷன் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் பெயரிலேயே தணிக்கை சான்று பெற்று ஓடிடி தளங்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் விஜயா சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் ஒப்பந்த விதிகளை மீறியுள்ளதாகக் குறிப்பிட்டு, படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.ஒப்பந்தத்தில் படத்தின் வெளியீடு மற்றும் உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் சமரச தீர்வு மையத்தை அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால், அந்த முறையின்படி சமரச தீர்வு காணப்படும் வரை திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: உங்களுக்கு என்ன தான் பிரச்சனையோ..!! அஜித்–விஜய் சந்திப்பை பார்த்து வரலட்சுமி சொன்ன வார்த்தைகள்.. ஷாக்கில் ரசிகர்கள்..!
இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, டிமான்டி காலனி 3 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு தொடர்பாக இயக்குநர் அஜய் ஞானமுத்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.டிமான்டி காலனி தொடர் படங்கள் ஏற்கனவே பிரபலமடைந்த நிலையில், மூன்றாவது பாகம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அருள்நிதி மீண்டும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம், முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக மேலும் ஆழமான திகில் கதையைச் சொல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஒப்பந்த சர்ச்சை காரணமாக வெளியீடு தடைபட்டுள்ளதால், படக்குழுவினரும் ரசிகர்களும் அடுத்தடுத்த நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ளனர்.நீதிமன்ற உத்தரவு இடைக்காலமானது என்பதால், இரு தரப்பினரும் சமரசம் காண வாய்ப்பு உள்ளது. இயக்குநர் தரப்பில் பதிலளித்த பிறகு வழக்கு மேலும் விசாரணைக்கு வரும்போது நிலைமை தெளிவாகும். அதுவரை டிமான்டி காலனி 3 திரையரங்குகளில் வெளியாக முடியாத நிலை தொடர்கிறது. இந்த சம்பவம் திரைத்துறையில் ஒப்பந்தங்கள் மற்றும் உரிமைகள் தொடர்பான விவகாரங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.
இதையும் படிங்க: 33 வயதில் 2 குழந்தைகளுக்கு அம்மா..!! டைட்டானிக் ரோஸ் போல செம கவர்ச்சியாக வந்த பிரணிதா சுபாஷ்.. வைரலாகும் போட்டோஸ்.!