கார் ரேசிங்கை நான் எனக்காக செய்யவில்லை..!! மனம் திறந்த நடிகர் அஜித்குமார்..!!
நடிகரும் ரேசருமான அஜித் குமார் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், ரசிகர்களால் 'தல', 'AK' என்று அன்போடு அழைக்கப்படுபவருமான அஜித் குமார், நடிப்புத் துறையில் மட்டுமின்றி கார் ரேசிங் துறையிலும் தனது ஆர்வத்தைத் தீவிரமாகத் தொடர்ந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சர்வதேச அளவில் பல்வேறு புகழ்பெற்ற சர்க்யூட்களில் பங்கேற்று வருவது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்து வருகிறது.
மலேசியா, துபாய், பெல்ஜியத்தின் சர்க்யூட் ஆஃப் ஸ்பா-பிரான்கோர்சாம்ப்ஸ் (Spa-Francorchamps), ஜெர்மனியின் நர்பர்க்ரிங் (Nürburgring) உள்ளிட்ட உலகின் சவாலான ரேஸ் டிராக்குகளில் அஜித் தொடர்ச்சியாகப் பயிற்சி பெற்று, போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்த ரேஸ் நிகழ்வுகளில் அவரது ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்ளவும், அவரை நேரில் காணவும் ரசிகர்கள் பெருந்திரளாகக் குவிந்து வருகின்றனர். இது அவரது ரசிகர் பட்டாளத்தின் அளவையும், அவர்மீதான அன்பின் ஆழத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.
இதையும் படிங்க: ரேஸ் காரில் நடிகர் அஜித் குமாருடன் Raid போக தயாரா..! Ticket விலையுடன் poster-யை வெளியிட்ட AK..!
சமீபத்தில் அஜித்குமார் அளித்த பிரத்யேக பேட்டியொன்றில், அவர் தனது ரசிகர்களுக்கு மனம் திறந்து நன்றி தெரிவித்தார். ரசிகர்களின் ஆதரவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் மிகுந்த உணர்ச்சிமயமானதாக இருந்தது. "ரசிகர்களின் ஆதரவு எனக்கு மிக முக்கியமானது. பெரும்பாலான சமயங்களில், ஒருவர் தனது சொந்த வசதியையும், நேரத்தையும் விட்டுவிட்டு வெளியே வரும்போது, 'அவர் இப்படிச் செய்யலாமா? கூடாதா?' என்று பல விமர்சனங்களும் விவாதங்களும் எழுவது வழக்கம்.
https://www.instagram.com/reel/DUaM5HPkTQy/
நானும் அத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்கிறேன். ஆனால், மலேசியா, துபாய் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களும், நலம் விரும்பிகளும் அளிக்கும் ஆதரவு என்னை மிகவும் தொட்டுவிடுகிறது," என்று அவர் கூறினார். மேலும், "சர்க்யூட் ஆஃப் ஸ்பா-வில் சுமார் 9,000 ரசிகர்களும், நர்பர்க்ரிங்கில் சுமார் 6,000 ரசிகர்களும் என்னை ஆதரிக்க வந்திருந்தனர். இது எனக்கு ஒரு பெரிய உறுதிப்பாட்டைத் தருகிறது.
நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை இந்த ஆதரவு உறுதி செய்கிறது," என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார். அஜித் தனது ரேசிங் ஆர்வத்தைப் பற்றி பேசுகையில், "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், "நான் இதை எனக்காகச் செய்யவில்லை. எனக்கு இந்த விளையாட்டு மீது அளவு கடந்த காதல் உண்டு. என்னால் முடிந்தவரை நீண்ட காலம் ஒரு தொழில்முறை பந்தய ஓட்டுநராகத் தொடர விரும்புகிறேன்," என்று தனது உறுதியை வெளிப்படுத்தினார்.
நடிப்புத் துறையில் பல சாதனைகளைப் படைத்த அஜித் குமார், தற்போது கார் ரேசிங் துறையிலும் தனது இடத்தை உறுதிப்படுத்தி வருகிறார். ரசிகர்களின் அளவற்ற ஆதரவு அவருக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாகவும், இது அவரது பயணத்தை மேலும் வலுப்படுத்துவதாகவும் அவர் கூறியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அஜித் குமாரின் இந்தப் பயணம், திரையுலக நடிகர்கள் மட்டுமின்றி, விளையாட்டுத் துறையிலும் தங்கள் ஆர்வத்தைத் தொடர முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ரசிகர்களின் அன்பும், அவரது உழைப்பும் இணைந்து அவரை மேலும் உயரங்களுக்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க: TTT படம் இன்னும் பாக்கலையா..!! அப்போ வரும் 7ம் தேதி போங்க..!! ஸ்பெஷல் பரிசு காத்திருக்கு..!!