மகனுக்கு 51வது பிறந்தநாள்.. சாய்பாபா கோவிலில் தாய் ஷோபா செய்த காரியம்..!
மகன் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் உள்ள சாய்பாபா கோவிலில் தாய் ஷோபா சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராகவும், பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் பயணித்து வருபவர் “தளபதி” என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய். 1974 ஜூன் 22 அன்று பிறந்த விஜய், 1984இல் தனது 10வது வயதில் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய வெற்றி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம் போன்ற படங்களில் குழந்தை நடிகராக பங்களித்தார். மேலும், 1992இல் நாளைய தீர்ப்பு மூலம் முதன்மை நடிகரானார். பிறகு அடிமேல் அடிவைத்து தளபதி என்ற பட்டத்துடன் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தார்.
பிறகு அரசியலில் குதித்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி கலக்கி வருகிறார். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந்தேதி திரையங்குகளில் வெளியாக உள்ளது. 'ஜனநாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார்.
இதையும் படிங்க: "ஹாப்பி பர்த்டே டூ தளபதி விஜய்".. கென்யாவில் இருந்து பறந்து வந்த வாழ்த்து.. சொன்னது யார் தெரியுமா..?
இந்நிலையில் இன்று தனது 51வது பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு அனைவரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். திரையுலகினர் மட்டுமில்லாமல் பல்வேறு அரசியல் கட்சியினர், ரசிகர்கள், பொதுமக்கள்.. ஏன் கடல் கடந்துகூட விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து குவிந்த வண்ணம் உள்ளது.
மேலும் தவெக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் ஏழை மக்களுக்கு மளிகைப் பொருட்கள், உடைகள் மற்றும் உணவு விநியோகம் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி பல இடங்களில் அவரது ரசிகர்கள், ஆதரவாளர்கள் என ஏராளமானோர் கோவில்களில் சிறப்பு பூஜை செய்தும், மக்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகின்றனர்.
எம்மதமும் சம்மதம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, முன்னதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி கோயில், தேவாலயம் மற்றும் மசூதியில் சிறப்பு வழிபாடு நடத்தினார். மேலும் ஆனந்த் தலைமையில் 51 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் ஒரு கிராம் வெள்ளி நாணயம் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டதோடு, சென்னை ஈஞ்சம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மகன் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் உள்ள சாய்பாபா கோவிலில் தாய் ஷோபா சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார். அங்கு 1008 சங்காபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஷோபா சந்திரசேகர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதையும் படிங்க: பர்த்டே ட்ரீட் கொடுக்கப்போகும் விஜய்.. ஜூன் 22ல்.. ரிலீசாகிறது "ஜன நாயகன்" பட முதல் பாடல்..!