×
 

மாதம்பட்டி தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்..! ஜாய் கிரிசல்டாவுக்கு ரூட்டை கிளியர் செய்து கொடுத்த நீதிபதிகள்..!

மாதம்பட்டியை குறித்து என்ன வேண்டுமானாலும் பதிவிடலாம் ஜாய் கிரிசல்டாவுக்கு நீதிமன்றம் ஃபுல் பர்மிஷன் வழங்கியுள்ளது.

பிரபல சமையல் கலைஞரும், சமீபகாலமாக சினிமா, நிகழ்ச்சி நிகழ்ச்சிகள், டிஜிட்டல் பிளாட்பார்ம்களிலும் பெரிய அளவில் காணப்பட்டுவரும் மாதம்பட்டி ரங்கராஜ், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக சிக்கல்களில் சிக்கியுள்ளார். தன்னைப் பற்றிய அவதூறு கருத்துகள், நெருக்கமான புகைப்படங்கள், மற்றும் தனது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விவரங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாகக் கூறி, ஜாய் கிரிசல்டா என்பவரை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதன்படி மாதம்பட்டி ரங்கராஜ், சமையல் நிகழ்ச்சிகள் மூலம் புகழ்பெற்றவர். குறிப்பாக, "குக் வித் கோமாளி", மற்றும் பல இணையத் தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள், சினிமா வாய்ப்புகள் போன்றவற்றில் பங்கேற்று வந்துள்ளார். இதற்கிடையில், ஜாய் கிரிசல்டா என்ற பெண், சமூக வலைதளங்களில் தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜுடன் தனக்கு நெருக்கம் இருந்தது,  அவர் திருமணம் செய்ய வாக்குறுதி அளித்து, பின்னர் தவிர்த்துவிட்டார், தன்னை கர்ப்பமாக்கி, பின்னர் விலகிவிட்டார், இவர் சமூகத்தில் தன்னைப் போல பலரை ஏமாற்றியிருக்கிறார்,  என்கிற வகையில் தொடர்ந்து பதிவுகள் செய்து வந்துள்ளார். இதனால் தனது மனநிலை பாதிக்கப்படுவதுடன், பார்ப்பவர்களிடையேயும் அவமதிப்பு ஏற்படுவதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் “அவதூறு தடுக்கும் வழக்கு” ஒன்றை தொடர்ந்தார் ரங்கராஜ்.

இப்படி இருக்க இன்று, இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்கள் இருபுறத்திலும் வாதங்களை முன்வைத்தனர். மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் - இது அவதூறான நடவடிக்கை. தனிமனித உரிமை மீறப்படுகிறது. தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வது சட்டவிரோதம். இவரது பொது வாழ்க்கைக்கும், தொழிலுக்கும் பாதிப்பாகிறது. அவதூறு கருத்துகளை நிறுத்த வலியுறுத்தும் தடை உத்தரவு தேவை. என கூறியப்பட்டது. இதனை அடுத்து ஜாய் கிரிசல்டா தரப்பில் - அவருடன் எனக்கு உண்மையான உறவு இருந்தது. அவர் திருமண உறுதியுடன் என்னை நம்ப வைத்தார். உண்மை சம்பவங்களை பகிர்வதில் தான் நான் ஈடுபடுகிறேன். இது ‘freedom of speech’ எனும் அடிப்படையில் பாதுகாக்கப்படுகிறது. அவதூறு என்றால் அவர் என் மீது வழக்கு தொடரட்டும், ஆனால் 'மௌனம்' கட்டாயமாக்க இயலாது. என வாதிட்டனர்.

இதையும் படிங்க: பிரியா வாரியாருக்கு போட்டி இந்த நடிகையா..! தனது பேச்சால் ரசிகர்களை ஷாக்கிய அந்த தருணம்..!

இந்த இரு வாதங்களை ஆராய்ந்த நீதிபதிகள், விரிவான பரிசீலனையின் பிறகு, மாதம்பட்டி ரங்கராஜ் கோரிய "அவதூறு கருத்துகளுக்கு தடை விதிக்க" வேண்டிய உத்தரவை மறுத்தனர். அதன் படி நீதிமன்றத்தின் முக்கியக் கருத்து, "ஒரு நபர் தன்னைப் பற்றிய கருத்துகளை பகிர்வது மட்டுமின்றி, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை சொல்வதற்கு உரிமை உண்டு. அவ்வாறு கூறப்படும் தகவல்கள் உண்மையல்ல என்றால், அவன் மீது தனி அவதூறு வழக்குகள் தொடரலாம். ஆனால் பொதுவான தடை உத்தரவு வழங்க இயலாது. இது அடிப்படை உரிமை மீறலாகும்." என சொல்லப்பட்டது. இந்த தீர்ப்புக்குப் பிறகு, மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் சிறிது ஏமாற்றம் காணப்பட்டது. ஆனால் சட்டத்திற்கேற்பவே நடந்த தீர்ப்பு என வாதிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜாய் கிரிசல்டா மாதம்பட்டி ரங்கராஜ் மீது போலீசில் ஒரு புதிய புகாரும் அளித்துள்ளார்.

இதில் அவர்,  அவர் என்னுடன் நீண்டகால உறவில் இருந்தார். திருமணம் செய்வதாக கூறினார். நம்பிக்கையில் உறவு வைத்தார். கர்ப்பம் ஏற்பட்ட பிறகு, உறவுக்கு உறுதிமொழி தர மறுத்தார். சமூக அழுத்தத்தால் தனிமையில் வாழ நேரிடுகிறது. இந்த புகார் தொடர்பாக சென்னை பெண்கள் காவல் நிலையம் விசாரணை நடத்தி வருவதாகவும், இது தனியாகக் குற்றவியல் வழக்காக மாறக்கூடிய சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி மாதம்பட்டி ரங்கராஜ், சமையல் கலைஞராக மட்டுமின்றி, ஒரு சாதனை புரிந்த டிஜிட்டல் பிரபலம். அவரின் YouTube வீடியோக்கள் மில்லியனுக்கும் மேலான பார்வைகளை பெற்றுள்ளன.

இன்று பாரம்பரிய சமையலையும், காமெடிப் பாணியிலும், தனித்துவமான நிகழ்ச்சி நடத்தியவராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவ்வாறான புகழுடன் வரும் பொது, தனிப்பட்ட விவகாரங்கள் மேடையில் கண்ணுக்குத் தெரியக்கூடியவையாக மாறுவது சாதாரணமல்ல. ஆனால் இது அவர் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி சினிமா, ஊடகங்கள் மற்றும் சமூக கட்டமைப்புகள் ஐந்து முறை சிந்திக்க வேண்டிய தருணம். ஆகவே மாதம்பட்டி ரங்கராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட பிரபலத்தால் பாதிக்கக்கூடிய குற்றச்சாட்டுகள், அவரது பணியையும், சமூக மடல்களையும் ஒரு சோதனைக்குள் கொண்டு வந்துள்ளன.

ஆனால் நீதிமன்றம், கருத்து சுதந்திரத்தை முன்னிலைப்படுத்திய தீர்ப்பு வழங்கியிருப்பது, சட்டத்தின் சரியான பாதையை பிரதிபலிக்கிறது. இதேவேளை, ஜாய் கிரிசல்டா அளித்துள்ள புதிய புகாருக்கு விசாரணை நடைபெறுவதால், இந்த வழக்கு இன்னும் பல கட்டங்களை கடக்கக்கூடியதாகவே உள்ளது.

இதையும் படிங்க: இயக்குநர் மாரி செல்வராஜின் தரமான சம்பவம் தான் "பைசன்"..! தனது பேச்சால் வியக்க வைத்த நடிகர் துருவ் விக்ரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share