புனே அழகி வரதட்சணை கொலை வழக்கில் முக்கிய திருப்பம்! சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புதல்!
போபாலில் நொய்டாவைச் சேர்ந்த 33 வயதான ட்விஷா ஷர்மாவின் வரதட்சணைக் கொலை வழக்கு ஓர் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது.
போபால்: நொய்டாவைச் சேர்ந்த 33 வயதான ட்விஷா ஷர்மா வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த வழக்கு பெரும் திருப்பத்தை எடுத்துள்ளது. இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க மத்தியப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 1946-ம் ஆண்டு டெல்லி சிறப்பு காவல் அமைப்புச் சட்டத்தின் 6-ம் பிரிவின்கீழ், மாநிலம் முழுவதும் சிபிஐ அதிகாரிகளுக்கு விசாரணை அதிகாரத்தை விரிவுபடுத்தி, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற மத்தியப் பிரதேச அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதன்மைக் குற்றம், குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல் மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் இந்த விசாரணை உள்ளடக்கியிருக்கும்.
உள்துறை செயலாளர் கிருஷ்ணவேணி தேஷாவத்து கையொப்பமிட்ட இந்த அறிவிப்பு, வழக்குக் கோப்புகளை உடனடியாக சிபிஐக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புனே அழகி சாவில் மர்மம்!! தற்கொலையில் திடீர் திருப்பம்!! கணவன் கையில் சடலம்! வெளியானது சிசிடிவி காட்சி!
ட்விஷா ஷர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்பு போபாலில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு வரதட்சணை கொடுமைக்கு ஆளான அவர், உயிரிழந்தார். இந்த வழக்கில் அவரது கணவர் மற்றும் மாமியார் உள்ளிட்டோர் மீது போபால் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், விசாரணை சரியான திசையில் நடைபெறவில்லை என குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி ட்விஷா குடும்பத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இறுதியில் மத்தியப் பிரதேச அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. சிபிஐ விசாரணை தொடங்கினால், வழக்கு முழுமையான திசையில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவது அரிதான நிகழ்வு என்பதால், இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சிபிஐ விசாரணை தொடங்கியவுடன், குற்றவாளிகள் யார் என்பது விரைவில் வெளியாகும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: புனே அழகி சாவில் மர்மம்!! தற்கொலையில் திடீர் திருப்பம்!! கணவன் கையில் சடலம்! வெளியானது சிசிடிவி காட்சி!