டெல்லியில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! டெம்போவில் நடந்த கொடூரம்! கத்தியால் குத்தி கொலை!
டெம்போவுக்குள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
புதுடெல்லி: நண்பரை சந்திக்கச் சென்ற 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 19 வயது இளைஞர் மற்றும் மூன்று சிறுவர்கள் என நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சந்தேகத்திற்கிடமான டெம்போவை பின்தொடர்ந்ததன் மூலம் போலீசார் வழக்கை துப்பு துலக்கியுள்ளனர்.
டெல்லியின் சுவரூப் நகர் பகுதியில் உள்ள குஷக் சாலை அருகே, செப்டம்பர் 13-ம் தேதி திறந்தவெளி பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால், ஆரம்பத்தில் அடையாளம் காண்பதிலும் சிரமம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் உடற்கூராய்வு தகவல்களின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போலீஸ் விசாரணையின்படி, சிறுமிக்கு தெரிந்த 17 வயது சிறுவனை சந்திக்க அவர் சென்றிருந்தார். அங்கு அந்த சிறுவனுடன் மேலும் சிலர் இருந்ததாகவும், பின்னர் அனைவரும் டெம்போவில் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு! ஜிம் வாசலில் பயிற்சியாளர் சுட்டுக்கொலை! ஒரே மாதத்தில் 3-வது கொலை!
டெம்போவுக்குள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். பின்னர் உடல் திறந்தவெளியில் வீசப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் சிவம் என அடையாளம் காணப்பட்ட 19 வயது இளைஞரும், 16 முதல் 17 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்களும் போலீஸ் பிடியில் உள்ளனர். குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு கத்திகள் மற்றும் சந்தேக நபர்கள் அணிந்திருந்ததாக கூறப்படும் ஆடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வழக்கில் முக்கிய திருப்பமாக, சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமாக சென்ற டெம்போவின் பாதையை பல கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து, வாகனத்தை கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் நான்கு பேரையும் பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். வழக்கில் ஒவ்வொருவரின் பங்கு என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மீண்டும் நிர்பயா!! டெல்லியில் ஓடும் பஸ்சில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! டிரைவர், உதவியாளர் கைது!