"மேகதாது விஷயத்தில் விஜய் கப்சிப்"..! இதுக்கு மட்டும் மீட்டிங்கா..? அனைத்துக் கட்சிக் கூட்டத்தை விளாசிய கனிமொழி.!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கனிமொழி எம்பி விமர்சனம் செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
மத்திய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் வாயிலாக அழைப்பிதழ்களை அனுப்பியிருந்தார்.
இந்த கூட்டத்தை அதிமுக, தேமுதிக, மநீம உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்திற்கு கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தொகுதி மறு வரையறை தொடர்பான கூட்டம் இன்று நடக்க உள்ளது.
இதையும் படிங்க: “தொகுதி மறுவரையறை போரில் முதல் பின்னடைவு? விஜய் கூட்டத்தில் முக்கிய கட்சிகள் ஆப்சென்ட்..!!
இந்த நிலையில், தொகுதி மறு வரையறையில் திமுகவின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும் இதில் விவாதிக்க எதுவும் இல்லை என்றும் அக்கட்சியை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரை தமிழக வெற்றிக்கழக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்று அறிவித்துள்ளார். மேகதாது அணை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வலியுறுத்தப்படும் நிலையில் தமிழக வெற்றிக்கழக அரசு மௌனம் காப்பதாக தெரிவித்துள்ளார். மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அமைச்சரை சந்தித்து வழங்க தமிழக அரசின் பிரதிநிதிகள் முன் வருவார்களா என்றும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழக எதிர்பார்த்த விஷயத்தில் திடீர் ட்விஸ்ட்... திமுக, அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்...!