என் ரூமுக்கு தனியா வா!! கொஸ்ட்டீன் பேப்பர் தரேன்!! மாணவியிடம் அத்துமீறிய கல்லூரி பேராசிரியர் கைது!
உத்தர பிரதேசத்தில், இளங்கலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி அத்துமீறிய உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை உதவி பேராசிரியராகப் பணியாற்றும் பரம்ஜித் சிங் என்பவர், இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களாக இந்த மாணவிக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படும் பரம்ஜித் சிங், அவரது மொபைல் போனுக்கு ஆபாச செய்திகளை அனுப்பியதுடன், தனியாக வரவழைத்து அத்துமீற முயற்சித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
உச்சகட்டமாக, சமீபத்தில் அந்த மாணவியின் போனுக்கு குரல் வழி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “அன்பே, தேர்வுக்கான இரண்டு வினாத்தாள்களை உனக்காக எடுத்து வைத்துள்ளேன். தனியாக வந்து என்னை சந்தித்தால் தருகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ஐ.டி நிறுவனத்தில் அரங்கேறிய மதமாற்றம், பாலியல் அத்துமீறல்!! 25 நாட்களாக தலைமறைவாக இருந்த கும்பல் தலைவி கைது!
இந்த செய்தியைப் பெற்ற மாணவி அதிர்ச்சியும், கடும் மன உளைச்சலுக்கும் ஆளானார். உடனடியாக லக்னோ பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தார். பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டாளர் வித்யானந்த் திரிபாதி இந்தப் புகாரின் அடிப்படையில் ஹசன்கஞ்ச் போலீசில் புகார் அளித்தார். போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து பரம்ஜித் சிங்கை கைது செய்தனர்.
விசாரணையின்போது பரம்ஜித் சிங் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். பல்கலைக்கழகத்தில் நிலவும் அரசியல் காரணமாக தன்னை பழிவாங்க முயற்சி நடைபெறுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் லக்னோ பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளிக்கும் பாலியல் தொல்லை சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் முழு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நாசிக் ஐ.டி. நிறுவனத்தில் அரங்கேறிய சதி!! பெயரை மாற்றி மலேசியா அனுப்ப திட்டம்! அம்பலமானது மதமாற்ற கொடூரம்!!