பாமக ராமலிங்கம் கொலை வழக்கு! NIA அதிரடி!! யார் இந்த இம்தத்துல்லா? வெளியான பகீர்?!
ராமலிங்கம் கொலையாளிகள், சதி திட்டம் தீட்டியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திண்டுக்கல்லை சேர்ந்த இம்தத்துல்லா மீது சென்னை சிறப்பு கோர்ட்டில் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனத்தில் 2019 ஆம் ஆண்டு நடந்த ராமலிங்கம் படுகொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. பாமக நகர செயலாளரும் பாத்திர கடை வியாபாரியுமான ராமலிங்கம், திருப்புவனம் - திருவிடைமருதூர் பகுதிகளில் நடந்த மதமாற்ற முயற்சிகளை தட்டிக் கேட்டதால் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பினரின் கோபத்துக்கு ஆளானார். இதனால் சதி திட்டம் தீட்டி அவரை கொலை செய்தனர்.
இந்த சென்சிடிவ் வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில் திருவிடைமருதூர் நடு முஸ்லிம் தெரு ரஹ்மான் சாதிக் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கொலையாளிகளுக்கு 6 ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்த முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திண்டுக்கல் இம்தத்துல்லா மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!! நிர்வாணமாக கிடந்த உடல்! ஈரோட்டிலா இப்படி? அதிகாலையில் மக்கள் அதிர்ச்சி!
என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “2019 மார்ச் மாதம் பிஎஃப்ஐ நிர்வாகிகளால் ராமலிங்கம் கொடூரமாக கொல்லப்பட்டது தமிழகத்தில் மத - இன மோதலை தூண்டும் அச்சத்தை ஏற்படுத்தியது. கொலை செய்தவர்கள் என்று தெரிந்தும் இம்தத்துல்லா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.
கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக அவரது தயவில் கொலையாளிகள் தஞ்சம் அடைந்திருந்தனர். கோடைக்கானலில் உள்ள ஆம்பூர் பிரியாணி கடையில் தங்குமிடம் அளித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் இம்தத்துல்லாவை கைது செய்தோம். வழக்கில் தொடர்புடைய 18 பேரையும் கைது செய்து விட்டோம். வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என தொடர்ந்து விசாரணை நடக்கிறது.”
சம்பவ தினத்தில் பாக்கு விநாயகம் தோப்பு அருகே பிஎஃப்ஐ நிர்வாகிகள் மதமாற்றத்தில் ஈடுபட்டனர். ராமலிங்கம் தடுக்க முயன்றதால் ஆத்திரமடைந்தனர். திருப்புவனம் பெரிய பள்ளிவாசல் அருகே கூடி “ராமலிங்கம் கையை வெட்டினால் மற்றவர்களுக்கு பயம் வரும்” என்று சதி திட்டம் தீட்டினர். இதன் தொடர்ச்சியாகவே கொடூரமான கொலை நடந்தது என என்ஐஏ ஏற்கனவே கூறியிருந்தது.
இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமலிங்கம் கொலைக்கு பின்னால் இருந்த சதி வலை முழுமையாக வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதி விரைவில் கிடைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழக அரசியலிலும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த வழக்கின் முடிவு எப்படி அமையும் என அனைவரும் கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பவாரியா கேங்! மீண்டும் தமிழகத்தில் நுழைத்த கொடூர கும்பல்? தீரன் படம் நினைவிருக்கா?