தமிழகத்தில் தொடங்கும் தீவிர SIR பணிகள்... சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுத் தாக்கல்... யாருக்கு சாதகம்...?
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளை எதிர்த்து திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்கிறது.
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. நாளை முதல் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. சிறப்பு வாக்காளர் திருத்தத்தை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. இருப்பினும் சென்னை உயர்நீதிமன்றத்தில் SIR பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் கொடுத்தது.
இதனிடையே, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி நடைபெறுவதாக பல அரசியல் கட்சிகள் தெரிவித்தது. வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டமானது தியாகராய நகரில் உள்ள ஓட்டல் அகார்டில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் SIR-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க மீண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காததால் உச்சநீதிமன்றத்தை நாட அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: SIR ஜனநாயக படுகொலை... பாத்துட்டு சும்மா இருக்க முடியாது...! முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!
அனைத்து கட்சி கூட்டத்தின் தீர்மானத்தின் படி திமுக சார்பில் என்ற உச்சநீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்யப்படுகிறது. நாளை SIR பணிகள் தொடங்கும் நிலையில் இன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்வது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: SIR பணிகளை நிறுத்தி வைக்க கோரி தீர்மானம்... அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த அதிரடி முடிவு…!