இரண்டு பேருமே புடிக்கும்! கணவரும் வேண்டும், காதலனும் வேண்டும்! அடம்பிடிக்கும் இளம்பெண்!
மூவரிடமும் போலீசார் தனித்தனியாக பேசி, பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண முயன்றுள்ளனர். ஆனால் பல மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகும் உடன்பாடு ஏற்படவில்லை.
சீதாபூர்: உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில், கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தீர்க்க போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, பெண் ஒருவர் கணவருடனும் மற்றொரு நபருடனும் ஒரே வீட்டில் வாழ விரும்புவதாக தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹ்மூதாபாத் பகுதியைச் சேர்ந்த சுபம் வர்மா என்பவருக்கும் அஞ்சு என்பவருக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நிதின் என்பவருடன் அஞ்சுவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்தப் பழக்கம் நெருக்கமாக மாறியதாகவும், சுபம் வீட்டில் இல்லாத நேரங்களில் நிதின் அங்கு வந்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் சுபமுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும், நிதினுடன் தொடர்பைத் தொடர வேண்டாம் என்றும் கூறியதாக தெரிகிறது. ஆனால், கணவரின் எதிர்ப்பையும் மீறி அஞ்சு நிதினுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கனமழையில் கணநேரத்தில் நடந்த சோகம்! வீடு இடிந்து 2 பச்சிளம் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!
இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பிரச்சினை தீவிரமடைந்த நிலையில், சுபம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சுபம், அஞ்சு மற்றும் நிதின் ஆகிய மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது சுபம், தனது மனைவி தன்னுடன் அல்லது நிதினுடன் வாழலாம் என்றும், ஆனால் இருவருடனும் ஒரே நேரத்தில் வாழ்வது தனக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியதாக தெரிகிறது. தேவைப்பட்டால் தான் வீட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு மாறாக, அஞ்சு தனது கணவரையும் நிதினையும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும், இருவருடனும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது இந்தக் கருத்து போலீசாரை அதிர்ச்சியடையச் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மூவரிடமும் போலீசார் தனித்தனியாக பேசி, பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண முயன்றுள்ளனர். ஆனால் பல மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகும் உடன்பாடு ஏற்படவில்லை. அஞ்சு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, உடனடி தீர்வு எதுவும் ஏற்படாத நிலையில் மூவரையும் போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது மஹ்மூதாபாத் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 8 மாத கர்ப்பிணி மனைவியை வெட்டிக்கொன்று நாடகமாடிய குழந்தையின் சாட்சியால் வெளியான அதிர்ச்சி சம்பவம்!