×
 

ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.1499!! விஜய் பெயரில் மோசடி!! லிங்கை தொட்டால் மொத்தமும் போச்சு! வார்னிங்!

த.வெ.க., தலைவர் விஜய் படத்துடன், 'விஜய் ஒவ்வொரு குடிமகனுக்கும் 1,499 ரூபாய் வழங்குகிறார். அதை பெற 'கெட் ஆபர்' பகுதியை 'கிளிக்' செய்யவும்' எனக்கூறி 'லிங்க்' அனுப்பி வருகின்றனர்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி அனுப்பும் செயலிகளில் மோசடிக் கும்பல்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபல செயலிகளின் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.

குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் படத்துடன், “விஜய் ஒவ்வொரு குடிமகனுக்கும் 1,499 ரூபாய் வழங்குகிறார். அதைப் பெற ‘கெட் ஆஃபர்’ பகுதியை கிளிக் செய்யுங்கள்” என்று கூறி லிங்க் அனுப்பப்படுகிறது. 

இதுபோன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா படங்களுடன் “ஹோலி ஸ்பெஷல்” என்ற பெயரில் ஜன் தன் யோஜனா திட்டத்தில் இணைந்து 5,000 ரூபாய் சலுகை என்று லிங்க் அனுப்பப்படுகிறது.

இதையும் படிங்க: ஊட்டிக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய குஷ்பு..!! அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் பறக்கும் படை..!!

ஜிபே செயலியில் வரும் ஊதா நிற ரிவார்டு கார்டை சுரண்டி சலுகை பெறுவது போல், “வின்சூ” என்ற பெயரில் ஜிபேயின் நீல நிறத்தை மட்டும் சுரண்டச் சொல்லி லிங்க் அனுப்பப்படுகிறது. போன் பே பெயரில் கேஷ்பேக் தருவதாகவும் பல லிங்குகள் வருகின்றன. 
டெலிகிராம் செயலியில் ஆபாச படங்கள் அல்லது தெரிந்தவர்கள் பெயரில் லிங்க் அனுப்பி, அதைத் தொட்டால் OTP வரும். அந்த எண்ணை உள்ளிடச் சொல்லி ஹேக் செய்து, பின்னர் டெலிகிராம் பிரைம் மெம்பர் ஆக வேண்டும் எனக் கூறி வங்கி விவரங்களைப் பெற்று பணத்தை பறிக்கும் மோசடியும் நடைபெறுகிறது.

இந்த மோசடிகள் பெரும்பாலும் வட மாநிலங்களைச் சேர்ந்த கும்பல்களின் கைவரிசையாக இருக்கலாம் என்று சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கின்றனர். தேர்தல் காலத்தில் மக்களின் ஆர்வத்தையும், பணம் பெறும் ஆசையையும் பயன்படுத்தி இத்தகைய லிங்குகள் அனுப்பப்படுகின்றன. இதுவரை பணத்தை இழந்ததாக புகார் வரவில்லை என்றாலும், மக்கள் பெரும் இழப்பை சந்திக்கும் அபாயம் உள்ளது.

சைபர் கிரைம் போலீசார் மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்றவற்றில் வரும் அத்தகைய லிங்குகளை கண்டுகொள்ள வேண்டாம். ஜிபே, போன் பே, கூகுள் பே போன்ற உண்மையான செயலிகளில் மட்டுமே சலுகைகள் அல்லது ரிவார்டுகள் வரும். அந்நிய லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள். OTP அல்லது வங்கி விவரங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். சந்தேகம் இருந்தால் உடனடியாக உள்ளூர் சைபர் கிரைம் போலீசை அணுகவும்.

தேர்தல் நேரத்தில் இத்தகைய மோசடிகள் அதிகரிப்பது வழக்கம். எனவே ஒவ்வொரு குடிமகனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒரு சிறிய கிளிக்கால் பெரும் இழப்பு ஏற்படலாம் என்பதை மறக்க வேண்டாம். பாதுகாப்பான இணையப் பயன்பாட்டை உறுதி செய்யுங்கள்.

இதையும் படிங்க: தேர்தல் விதிமீறல்..!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share