பெண் போலீசை தனியாக வரவழைத்து பாலியல் அத்துமீறல்!! கூட்டாளிகளுக்கும் விருந்தாக்க நினைத்த கயவன்! மூவர் கைது!
அந்த நபர் திடீரென அந்த பெண் போலீசை தொடர்பு கொண்டு உங்களை அவசரமாக சந்திக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார். மேலும் சிவகங்கையில் திருப்பத்தூர் சாலை பகுதியில் உள்ள ஒரு இடத்துக்கு வருமாறு கூறி இருக்கிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றும் 30 வயது பெண் போலீஸ் ஒருவர் தனது நண்பர் என்று நம்பிய ஒருவரால் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு மூன்று பேரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி குடும்பத்துடன் வாழ்ந்து வரும் இந்த பெண் போலீஸ், தனக்கு அறிமுகமான ஆண் நண்பருடன் அவ்வப்போது பேசி வந்துள்ளார். அந்த நபர் திடீரென அவரை அவசரமாக சந்திக்க வேண்டும் எனக் கூறி, சிவகங்கை திருப்பத்தூர் சாலையில் உள்ள ஒரு இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். நம்பிக்கையின் அடிப்படையில் அந்த பெண் போலீஸ் அங்கு சென்றுள்ளார். அந்தப் பகுதி ஆள்நடமாட்டம் இல்லாத புதர் சூழ்ந்த பகுதியாக இருந்தது.
அங்கு நைசாக பேச்சு கொடுத்தபடி அழைத்துச் சென்ற அந்த நபர், திடீரென பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கினார். மேலும் தனது இரு கூட்டாளிகளையும் அங்கு வரவழைத்து, மூவரும் சேர்ந்து அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். பயத்திலும் அதிர்ச்சியிலும் அந்த பெண் போலீஸ் அலறியவாறு ஓடி அருகில் உள்ள வீட்டினரிடம் உதவி கேட்டார். உள்ளூர் மக்கள் உடனடியாக உதவிக்கு வந்தனர். மூன்று பேரும் தப்பி ஓட முயன்றபோது அவர்களை மடக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியை சந்திக்கும் அதிபர் ட்ரம்ப்! ஜி7 மாநாட்டில் சுவாரஸ்யம்! உறுதிசெய்தது வெள்ளைமாளிகை!
உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரோந்து பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண் போலீசை மீட்டனர். சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் இச்சம்பவம் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். துணை சூப்பிரண்டு அமல்அட்வின் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மானாமதுரை அருகே தூதை கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ராபின் (28), சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த மகாராஜா (29) மற்றும் ஹரிஸ் (21) ஆகிய மூவரும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பெண் போலீசின் நண்பராக பழகிய ராபின் தான் அவரை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றதாக போலீசார் கூறினர். மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் போலீஸ் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து மேலும் கவனம் செலுத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!