×
 

பாக்.-ல் அதிகரிக்கும் பசி, பட்டினி.. வறுமையில் வாடும் 10 கோடி மக்கள்.. ஏழைகளின் நாடாக உருமாறும் அவலம்..!

பாகிஸ்தானில் வறுமைக்கோட்டுக்கு கீழ் 44.7 சதவீதம் பேர் வசிப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள ஒரு விவர அறிக்கையில் அதிர்ச்சி அளிக்கும் செய்தி வெளியாகி உள்ளது.

வறுமை ஒழிப்பில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் வெளியிட்ட ஆய்வறிக்கையில், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 415 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதேநேரம், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் வறுமை ஒழிப்பு மிக மோசமாக இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் ஆட்சி ரீதியாக நிறைய மாற்றங்கள் வந்தாலும், எந்தவொரு அரசும் அந்நாட்டு மக்களை வறுமையிலிருந்து மீட்பதிலும் பொருளாதார ரீதியாக அந்நாட்டை முன்னேறச் செய்வதிலும் ஆக்கப்பூர்வமாக இல்லை.

மற்ற சிறு நாடுகளின் வளர்ச்சியை விடவும் பாகிஸ்தான் நாட்டின் வளர்ச்சி வறுமை ஒழிப்பில் பின்தங்கியிருப்பதாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் வளர்ச்சி பெறுவதற்கு கொள்கை ரீதியாக நிறைய மாற்றங்கள் தேவை. வறுமை ஒழிப்பில் சிறப்பாக செயல்படாவிட்டால் அந்நாட்டில் மேலும் பலர் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்க வாய்ப்பிருப்பதாகவும் உலக வங்கி எச்சரிக்கை செய்துள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் குறித்து கேள்வி கேட்ட மகன்.. இதை அனுமதிக்க முடியாது! சசிதரூர் ரியாக்‌ஷன்..!

இந்த நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும் உலக வங்கி சமீபத்தில் வறுமைக்கான புதிய வருமான வரம்பை வெளியிட்டது. சர்வதேச வறுமைக் கோடுகளுக்கான இந்த திருத்தங்கள், சர்வதேச அளவில் ஒரு ஒப்பீட்டுத் திரட்டுதலின் அடிப்படையில், வாங்கும் சக்தி நிலை (poverty lines are based on 2021 purchasing power parity)யை அடிப்படையாகக் கொண்டவை.

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வால் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, குறைந்த நடுத்தர வருவாய் நாடுகளில், தீவிர வறுமைக்கான வருமான வரம்பு நாளொன்றுக்கு 180 ரூபாய் என்பதில் இருந்து, 250 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

வறுமைக்கான வருமான வரம்பு நாளொன்றுக்கு 300 ரூபாய் என இருந்தது, 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் குறைந்த நடுத்தர வருவாய் நாடுகளின் பட்டியலில் உள்ளது. இங்கு உள்ள மக்கள் தொகை எண்ணிக்கை 24 கோடி. தற்போது வறுமைக்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டதால், நாட்டில் தீவிர வறுமையில் இருப்போர் எண்ணிக்கை 4.9 சதவீதத்திலிருந்து 16.5 ஆக உயர்ந்தது. வறுமையில் இருப்போர் எண்ணிக்கை 39.8 சதவீதத்தில் இருந்து 44.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானின் வறுமை நிலைகளை தெளிவுப்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும் , பாகிஸ்தானியர்களின் வறுமை பாதிப்பைக் குறைப்பதற்கும், மீண்டு வருவதற்கான யோசனைகளின் முயற்சிகளும் தொடரும் என உலக வங்கியின் பாகிஸ்தான் நாட்டிற்கான இயக்குநர் நஜய்பென்ஹாசீன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானில் நாள் ஒன்றுக்கு ரூ.350 முதல் 361 வரை குறைந்த சம்பளம் வாங்குகின்றனர். இவர்கள் வறுமைக்கோடிற்கு கீழ் வாழும் நிலையாக பிரிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 44. 7 சதவீதம் பேர் (10 கோடி பேர்) இந்த நிலைக்குள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் என்பதிலும் தாழ்வாக நாள் ஒன்றுக்கு ரூ.258 சம்பளம் வாங்குவோர் உள்ளதாகவும், இவர்கள் தற்போது 2 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ. 688 வீதம் சராசரியாக சம்பளம் வாங்குவோர் உயர்ந்த மற்றும் நடுத்தர வர்க்கமாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. எகிறும் எண்ணிக்கை.. மீண்டும் லாக்டவுன்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share