பாகிஸ்தான் குறித்து கேள்வி கேட்ட மகன்.. இதை அனுமதிக்க முடியாது! சசிதரூர் ரியாக்ஷன்..!
பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் குற்றத்திற்கான ஆதாரத்தை எந்த நாட்டின் தூதுவராவது உங்களிடம் கேட்டிருக்கிறார்களா? என சசிதரூரின் மகன் அவரிடம் கேள்வி எழுப்பினார்.
பாக்., ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து உலக நாடுகளிடம் விளக்கம் அளிப்பதற்காக நம் நாட்டின் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு 33 நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான குழுவினர், அமெரிக்காவின் வாஷிங்டனில் அந்நாட்டு எம்பிக்களை சந்தித்து பயங்கவராதத்திற்கு எதிரான நம் நிலைப்பாட்டையும், நடவடிக்கையையும் விளக்கினர்.
தொடர்ந்து காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான எம்பிக்கள் குழு, அமெரிக்காவில் இருக்கிறது. அங்கு பத்திரிகையாளர்களை சசிதரூர் சந்தித்தார். அப்போது, ஒரு கேள்வி கேட்கலாமா என பத்திரிகையாளர் ஒருவர் கையை உயர்த்தினார். அந்த பக்கம் திரும்பி பார்த்த சசிதரூர், ‘இதை அனுமதிக்க கூடாது; இது என் மகன்’ என்று சிரித்துக்கொண்டே கூறினார்.அந்த பத்திரிகையாளர் இஷான் தரூர். சசிதரூரின் மகன். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் உலக விவகாரங்கள் கட்டுரையாளராக உள்ளார். எழுந்து நின்ற இஷான், தன் தந்தையிடம் கேள்வியை கேட்டார்.
இதையும் படிங்க: ராகுல்காந்தியா? சசி தரூரா? யார் சொல்வது பொய்.. பற்ற வைத்து ரசிக்கும் மோடி..!
பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் குற்றத்திற்கான ஆதாரத்தை எந்த நாட்டின் தூதுவராவது உங்களிடம் கேட்டிருக்கிறார்களா? ஆரம்ப தாக்குதலில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் திரும்ப திரும்ப மறுப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்? என கேட்டார். பதில் அளித்த சசிதரூர், இந்த கேள்வியை கேட்டதற்கு மகிழ்ச்சி. நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல், ‘ஆபரேஷன் சிந்தூரை’ இந்தியா நடத்தி இருக்காது என்பதை மிகத் தெளிவாக சொல்கிறேன்.
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. எங்களிடம் யாரும் ஆதரத்தை கேட்கவில்லை. 2,3 இடங்களில் ஊடகங்கள் மட்டும் இந்த கேள்வியை கேட்டன. இந்தியா ஒரு ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு மிகவும் உறுதியான அடிப்படை இல்லாமல் செய்யும் நாடு அல்ல. பாகிஸ்தானில் இருந்து 37 ஆண்டுகளாக இந்தியாவுக்கு தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குல்கள் நடந்து வருகிறது.
பாகிஸ்தானில் ராணுவ முகாமுக்கு அருகே பாதுகாப்பான வீட்டில் ஒசாமா பின்லேடன் கண்டுபிடிக்கப்பட்டார். அதுவரை, அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாது என பாகிஸ்தான் சொன்னதை அமெரிக்கர்கள் மறந்துவிடவில்லை. 2008 மும்பை தாக்குதலில் கூடத்தான் எங்களுக்கு தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் சொன்னது. தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவனை உயிருடன் பிடித்து அவரது பெயர், முகவரி, தேசியம் அடையாளப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் யார் என்பது எங்களுக்கு தெரியும். அவர்கள் பயங்கரவாதிகளை அனுப்புவார்கள். கையும் களவுமாக பிடிபடும் வரை அதை அவர்கள் செய்யவில்லை என்று மறுப்பார்கள் என்று சசிதரூர் கூறினார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு அவங்க மொழியிலேயே பதிலடி கொடுத்தோம்! அமெரிக்காவில் சசிதரூர் கெத்து ரிப்ளை!