பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் என்ன தொடர்பு! 6 மணி நேரம் விசாரணை! பில் கிளிண்டன் வாக்குமூலம்!
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் தனக்கு இருந்த தொடர்பு குறித்து, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பார்லி குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தனக்கு இருந்த தொடர்பு குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் அமெரிக்க ஹவுஸ் ஒவர்சைட் கமிட்டி (பார்லி குழு) முன்னிலையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது அமெரிக்க அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெப்ரி எப்ஸ்டீன், நிதி ஆலோசகராக இருந்தவர். சிறுவர், சிறுமியரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார். சிறையில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு அரசியல், தொழில் துறை பிரபலங்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களில் கிளிண்டன், பில் கேட்ஸ் போன்றோர் எப்ஸ்டீன் நடத்திய பார்ட்டிகளில் கலந்துகொண்டது தெரியவந்தது. இதனால் எப்ஸ்டீன் விவகார விசாரணை தீவிரமடைந்தது.
இந்நிலையில், குடியரசு கட்சி தலைமையிலான ஹவுஸ் ஒவர்சைட் கமிட்டி கிளிண்டனை சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தது. பிப்ரவரி 27, 2026 அன்று நியூயார்க்கின் சாப்பாக்வாவில் மூடிய அறையில் நடந்த விசாரணையில் கிளிண்டன் 6 மணி நேரத்திற்கும் மேலாக கேள்விகளுக்கு பதிலளித்தார். பொதுமக்கள் அல்லது ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: கைதான 11 மணி நேரத்தில் விடுதலை!! பாலியல் குற்றவாளி எப்ஸ்டினுடன் தொடர்பு! பிரிட்டன் மன்னர் சகோதரர் விடுவிப்பு!
விசாரணையில் கிளிண்டன், "எப்ஸ்டீனின் குற்றங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர் தவறு செய்திருந்தால் நானே அவரை காட்டிக் கொடுத்திருப்பேன். எந்த தவறும் செய்யவில்லை, எதுவும் பார்க்கவில்லை" என்று திட்டவட்டமாக மறுத்தார்.
எப்ஸ்டீனுடன் தனது தொடர்பு பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது என்றும், பார்ட்டிகளில் இருந்த பெண்களை தனக்குத் தெரியாது, அவர்களுடன் எந்த உறவும் இல்லை என்றும் கூறினார்.
விசாரணையில் ஹாட் டப் புகைப்படம், விமான பயண லாக் போன்றவை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. கிளிண்டன் அந்த புகைப்படத்தில் இருந்த பெண்ணை தனக்குத் தெரியாது என்று பதிலளித்தார்.
விசாரணைக்குப் பிறகு வீடியோ அறிக்கை வெளியிட்ட கிளிண்டன், "எந்த ஒருவரும் சட்டத்திற்கு மேலல்ல. எப்ஸ்டீன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்புகிறேன்" என்று கூறினார். தனது மனைவி ஹிலாரியை விசாரணைக்கு அழைத்தது தவறு என்றும் விமர்சித்தார். (ஹிலாரி ஒரு நாள் முன்பு 6 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.)
இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டார். உலக பொருளாதார மன்ற தலைவர் போர்கே பிரண்டே பதவி விலகினார். பிரிட்டனுக்கான அமெரிக்க தூதர் பதவி விலகினார். கிளிண்டனின் வாக்குமூலம் டிரான்ஸ்கிரிப்ட் வெளியிடப்படும் என கமிட்டி தெரிவித்துள்ளது. இது அமெரிக்க அரசியலில் புதிய முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உலகை உலுக்கிய எப்ஸ்டீன் பாலியல் வழக்கு!! அரசு குடும்பத்திற்கு சம்பந்தமா? பிரிட்டன் மன்னரின் சசோதரர் கைது?!