×
 

ஜெய்சங்கர் தரமான சம்பவம்! இந்தியா - ஈரான் இடையே ஒப்பந்தம்! இனி ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்!!

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நம் நாட்டுக்கு கப்பல்கள் வர தொடங்கி உள்ளன. இதனால் கச்சா எண்ணெய் - கியாஸ் தட்டுப்பாட்டு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு வரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளை பாதிக்கப்பட்டது. 

உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் இந்த ஜலசந்தி வழியாகவே நடக்கிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அரபு வளைகுடா நாடுகளில் இருந்து வரும் எண்ணெய், எரிவாயு இந்த பாதையை சார்ந்துள்ளது. ஈரான் தாக்குதல் எச்சரிக்கை விடுத்ததால், இந்திய கப்பல்கள் உட்பட பலர் பயணம் செய்ய முடியாமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. எண்ணெய் விலை உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை அச்சம் எழுந்தது.

இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யத் அப்பாஸ் அரக்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். முதல் இரு உரையாடல்கள் பலனளிக்காத நிலையில், நேற்றிரவு மூன்றாவது முறையாக நடந்த பேச்சு வெற்றி பெற்றது. 

இதையும் படிங்க: இந்தியா வந்த கப்பல் மீது தாக்குதல்! மாலுமிகள் மாயம்!! ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த கோரம்!


இந்தியாவின் எரிசக்தி தேவை, வர்த்தகம், அத்தியாவசிய சேவைகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தி எவ்வளவு முக்கியம் என்பதை ஜெய்சங்கர் விளக்கினார். இதை புரிந்து கொண்ட ஈரான் அரசு, இந்திய கொடியுடன் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பயண அனுமதி வழங்கியது.

இதன்படி, முதற்கட்டமாக 'புஷ்பக்' மற்றும் 'பரிமல்' ஆகிய இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்துள்ளன. இது இந்தியாவுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. தடைபட்ட கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. தட்டுப்பாடு, விலை உயர்வு பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் தொடர்ந்து தடை விதித்துள்ளது. அவை ஜலசந்தியை கடக்க முயன்றால் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பின்னர் போர் தீவிரமடைந்த நிலையில், இந்தியாவின் இராஜதந்திர வெற்றி கவனத்தை ஈர்த்துள்ளது.

இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசு மாற்று வழிகளிலும் எண்ணெய் இறக்குமதியை தீவிரப்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: ஈரான் - இஸ்ரேல் போரில் சீனா குதூகலம்! 12 நாளில் 11 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய் விநியோகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share