×
 

சீனா-துருக்கியுடன் கைகோர்ப்பு! அடுத்தடுத்து பாக்., வந்த ராணுவ விமானங்கள்! இந்தியாவுக்கு புது தலைவலி!

சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி இடையே சமீபத்தில் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதும் இந்த பின்னணியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சீனா மற்றும் துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு சுமார் 60 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து கனரக ராணுவ விமானங்கள் வந்திறங்கியதாக வெளியாகியுள்ள தகவல்கள், பிராந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன. இந்த விமானங்களில் பாகிஸ்தானுக்கான ராணுவ தளவாடங்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே அமைந்துள்ள நூர் கான் விமானப்படைத்தளம் மற்றும் கராச்சியில் உள்ள மஸ்ரூர் விமானப்படைத்தளத்தில் சில நாட்களுக்கு முன்பு சீனா மற்றும் துருக்கியைச் சேர்ந்த கனரக ராணுவ விமானங்கள் அடுத்தடுத்து தரையிறங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அந்த விமானங்களில் சரியாக என்ன பொருட்கள் கொண்டு வரப்பட்டன என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பின்னர், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாகிஸ்தான் சீனாவை முக்கிய கூட்டாளியாக நம்பி வருகிறது.

இதையும் படிங்க: சகோதர நாடு என நினைத்தோம்! இப்படியா பண்ணுவீங்க? UAE மீது பாக்., எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு!

இதற்கிடையே, இந்த மாத தொடக்கத்தில் போர் விமான மேம்பாடு தொடர்பான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த பாகிஸ்தானும் துருக்கியும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு ஏற்கனவே தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில், கனரக ராணுவ விமானங்களின் அடுத்தடுத்த வருகை கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி இடையே சமீபத்தில் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதும் இந்த பின்னணியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு கட்டமைப்பு உருவாகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சீனா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளும் பாகிஸ்தானின் ராணுவ திறனை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து ஒத்துழைத்து வரும் சூழலில், இந்த விமானப் போக்குவரத்து சாதாரண ராணுவப் போக்குவரத்தா அல்லது முக்கிய தளவாட நகர்வா என்பது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு நேரடி நடவடிக்கையையும் இந்த விமான வருகை உறுதி செய்கிறது என்று கூற முடியாது. அதே நேரத்தில், பாகிஸ்தான்-சீனா-துருக்கி இடையிலான அதிகரித்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு கணக்கில் கவனிக்க வேண்டிய புதிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அசிம் முனீருக்கு கூடுதல் அதிகாரம்.. பாகிஸ்தானில் அமலுக்கு வந்த புதிய ராணுவ சட்டங்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share