×
 

“இன்னும் 3 மாசம் தான்...” - தவெக ஆட்சிக்கு ஃபுல் ஸ்டாப் வைக்கப்போகும் திமுக... முன்னாள் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!

இந்த ஆட்சி இன்னும் மூன்று மாதம் தான் நீடிக்கும் என முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கருத்து

தமிழகத்தில் திமுக மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆட்சிக்கு வந்த தவெக அரசின் ஆட்சியில் கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது எனவும் இவர்கள் அறிவித்த வாக்குறுதிகள் கானல் நீராக தான் உள்ளது. இந்த ஆட்சி இன்னும் மூன்று மாதம் தான் நீடிக்கும் என  திருச்செந்தூர் அருகே உள்ள எல்லப்பன் நாயக்கன் குளத்தில் ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் இதனை தெரிவித்தார். 

 திருச்செந்தூர் அருகே உள்ள எல்லப்பன் நாயக்கன் குளம் அந்தப் பகுதி சுற்றுவட்டார விவசாய பணிகளுக்கும் பல்வேறு ஊராட்சிகளின் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் இந்த குளத்திலிருந்து தண்ணீர் எடுக்க செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்வதாகவும், மேலும் குளக்கரை முழுவதும் முள்செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுவதாகவும் கிராம மக்கள் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து எல்லப்பன் நாயக்கன் குளத்திற்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அப்பகுதியில் பொதுப்பணித்துறை குடிநீர் வடிகால் வாரியம் ஊராட்சி ஒன்றிய அதிகாரியுடன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து குளக்கரையில் உள்ள முள்செடிகள் உடனே அகற்ற உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து முள்செடிகள் அகற்றும் பணி தொடங்கியது. மேலும் உடன்குடி முத்தையாபுரம் மற்றும் குலசேகரப்பட்டினத்திற்கு செல்லக்கூடிய குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளையும் உடனே சீர் செய்ய அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேலும் இந்த குளக்கரை பகுதிகளில் குளிப்பதற்கு வசதியாக படித்துறைகளும் அமைத்து தரப்படும் என அந்த கிராம மக்களிடம் தெரிவித்தார். 

இதையும் படிங்க: மக்கள் பிரச்சனைகளுக்கு எப்போ கால்ஷீட்..? போராடனுமா.? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் இதைத்தொடர்ந்து இந்த பகுதிக்கு வருகை தந்த ஆய்வு மேற்கொண்டதாகவும், இந்த குடிநீர் குழாய்கள் ஒரிரு நாளில் சீர் செய்யப்பட்டு முழுமையான தண்ணீர் அந்த கிராமங்களுக்கு வழங்கப்படும் என்றார். 

கடந்த திமுக ஆட்சியில் பெருங்குற்றங்கள் நடந்ததாக பொய்யான தகவல்களை மக்களிடம் ஒன்று சேர்த்து ஆட்சிக்கு வந்தவர் தான் ஜோசப் விஜய். ஆனால் தற்போது இந்த ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் அதிகரித்து பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. மேலும் தொடர்ந்து நடைபெறும் குற்றங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுமட்டுமின்றி கடந்த கால ஆட்சி சிறந்த ஆட்சி எனவும் மீண்டும் திமுக ஆட்சி வராதா என மக்கள்  மத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சி இன்னும் மூன்று மாதங்கள் தான் இருக்கும் . இவர்கள் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் கானல் நீராகவே இருந்து வருகிறது. 

மீண்டும் திமுக ஆட்சி கண்டிப்பாக வரும் அப்போது மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது அரசுத்துறை அதிகாரிகள் திமுகவினர் மற்றும் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.
 

இதையும் படிங்க: சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share