ஹமாசுக்கு நரகம் காத்திருக்கு..பிப்.15-க்குள் விடுவிக்காவிட்டால்? ட்ரம்ப் எச்சரிக்கை..!
இஸ்ரேலிய பினை கைதிகளை ஹமாஸ் வரும் 15ஆம் தேதிக்குள் விடுவிக்காவிட்டால் போர் நிறுத்தம் உடனடியாக முறித்துக் கொள்ளப்படும் என புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு மேல் நீடித்த இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காசா மீதான தாக்குதலும் இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது. இது தற்காலிக உடன்படிக்கை தான். அதன்படி ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலிய பிணை கைதிகளை வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் விடுதலை செய்ய வேண்டும்.
இதற்கு கைமாறாக இஸ்ரேலும் ஏராளமான பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தப்படி தான் மூன்று கட்டமாக சில பிணை கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் தரப்பிலும் நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்து காசாவிற்கு அனுப்பி உள்ளது.
இந்த நிலையில் தான் இரு தரப்பிலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மீதம் உள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் இயக்கத்தினர் விடுவிக்கவில்லை என்றும் ஒப்பந்தத்தை மீறி ஏமாற்றுகிறார்கள் என்றும் இஸ்ரேல் தரப்பில் குறை கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதானியை மிரட்டிய FCPA சட்டம் முழுவதும் ரத்து..! தொழிலதிபர்களுக்கு ஆதரவாக மாறிய ட்ரம்ப்..!
இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி அதாவது சனிக்கிழமை 12:00 மணிக்குள் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் போர் நிறுத்தம் முறித்துக் கொள்ளப்பட்டு உடனடி நடவடிக்கை தொடங்கப்படும்.
அதன் பிறகு ஹமாஸ் இயக்கத்தினருக்கு நரகம் தான் காத்திருக்கும் என்று மிரட்டல் விடுத்தார். அது மட்டுமின்றி காசா பகுதியில் மக்கள் வெளியேற்றப்பட்டு வர்த்தக வளாகங்கள் கட்டப்படும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ட்ரம்பின் இந்த தான் தோன்றித்தனமான நடவடிக்கைகள் மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமின்றி அமெரிக்கர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது
இதையும் படிங்க: பாலஸ்தீனியர்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்.. காசாவை கைப்பற்றுவோம்.. டிரம்ப் சூளுரை..!