விளைவுகள் கடுமையாக இருக்கும்..! தனிக்கட்சி துவங்கும் எலான் மஸ்கை எச்சரிக்கும் ட்ரம்ப்..!
அதே போல் அமெரிக்கர்களுக்காக தான் புதிய கட்சி ஒன்றை துவங்கும் நேரம் வந்து விட்டதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் களம் இறங்கிய டிரம்ப் வெற்றி பெற்று 2வது முறை அதிபர் ஆனார். இந்த தேர்தலில் டிரம்புக்கு பெரிய அளவில் உதவியவர் அமெரிக்காவை சேர்ந்த உலக பணக்காரர் எலான் மஸ்க். டிரம்ப் கட்சிக்கு நன்கொடையாக பல ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்தார்.
டிரம்புக்காக நேரடியாக களம் இறங்கி தீவிரமாக பிரசாரமும் செய்தார். அதிபர் ஆனதும் நன்றி கடனாக DOGE எனப்படும் செயல்திறன் மேம்பாட்டு துறை என்ற சிறப்பு துறையை உருவாக்கி, அதன் தலைவராக மஸ்கை நியமனம் செய்து அழகு பார்த்தார் டிரம்ப்.
அரசுக்கும் டிரம்புக்கும் நிர்வாக ரீதியில் ஆலோசனை கொடுப்பது தான் இந்த துறைக்கான வேலை. நிதி சுமையை குறைக்க பல விஷயங்களை மஸ்க் செய்தார். டிரம்பும் மஸ்க் பரிந்துரையை ஏற்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வந்தார்.
இதையும் படிங்க: சசிதரூர் மேஜிக் சக்சஸ்.. பயங்கரவாதத்தை வேரறுக்க துணைநிற்போம்.. இந்தியாவுக்கு அமெரிக்கா சப்போர்ட்..
எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த நேரத்தில், இரு நண்பர்கள் இடையேவும் இப்போது மிகப்பெரிய மோதல் வெடித்து இருக்கிறது. உச்சத்தில் இருக்கும் இருவரும், அடிமட்டம் வரை இறங்கி வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசுகின்றனர்.
இந்த மோதலால் தான் செயல் திறன் மேம்பாட்டு துறையின் தலைவர் பதவியை தூக்கி எறிந்தார் மஸ்க். அதே போல் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்றும் மஸ்க் வலியுறுத்தி உள்ளார். டிரம்பை பதவி நீக்கம் செய்து விட்டு ஜேடி வான்சை புதிய அதிபராக அறிவிக்க வேண்டும் என்று ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.
அதற்கு பதில் அளித்த மஸ்க், ஆமாம் என்று கூறி உள்ளார். அதே போல் அமெரிக்கர்களுக்காக தான் புதிய கட்சி ஒன்றை துவங்கும் நேரம் வந்து விட்டதாகவும் அவர் சொல்லி இருக்கிறார்.
இது தொடர்பாக ட்வீட் மூலம் வாக்கு எடுப்பும் நடத்தினார். அதில் 81 சதவீதம் பேர், புதிய கட்சி துவங்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர். இந்த முடிவுகளை பார்த்து ஆச்சரியப்பட்ட எலான் மஸ்க், 'மக்கள் கருத்துக்களை கூறிவிட்டனர். இது தான் விதி' என கூறியவர், கட்சிக்கு 'தி அமெரிக்கா பார்ட்டி' என்ற பெயரை சமூக வலைதளத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் செய்தி சேனலுக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி: எலான் மஸ்க் மிகவும் அவமரியாதைக்குரியவர். அது மிகவும் மோசமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். அவர் வெள்ளை மாளிகையை அவமரியாதை செய்தார். அவரால் (எலான் மஸ்க்) நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் அவருக்கு நிறைய உதவி செய்திருக்கிறேன். அதிபர் பதவியை அவமரியாதை செய்ய முடியாது.
வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளிக்கும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராக போட்டியிட ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு எலான் மஸ்க் நிதியுதவி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மஸ்க் உடனான உறவுகளை சீர்படுத்தும் எண்ணம் இல்லை. நான் மற்ற வேலைகளைச் செய்வதில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். அவரிடம் பேசும் எண்ணம் எனக்கு இல்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரூ.5 பிஸ்கட் ரூ.2400க்கு விற்பனை.. காசாவில் போரால் ருத்ர தாண்டவம் ஆடும் வறுமை..!