திரும்ப திரும்ப நடந்தா கொலை... சிறுவன் இறப்புக்கு திமுக அலட்சியமே காரணம்... EPS குற்றச்சாட்டு...!
சிறுவன் உயிரிழப்புக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாநகராட்சியின் 4-வது வார்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட, தண்ணீர் தேங்கிய 5 அடிக் குழியில் தவறி விழுந்ததில் 4 வயது சிறுவன் ரோகித் பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிறுவன் ரோகித்தின் உயிரிழப்புக்கு முழு காரணம் திமுக அரசின் அலட்சியம் மட்டுமே என்று குற்றம்சாட்டி உள்ளார்.
கமிஷன் வாங்குவதில், டெண்டர் கொள்ளை அடிப்பதில் இருக்கும் கவனம் எல்லாம், பணிகளை பாதுகாப்பாக செய்வதில் இந்த விடியா அரசுக்கு இருக்கிறதா என்று சாடியுள்ளார்.இது போன்ற உயிரிழப்பு நேர்வது இதென்ன முதல் முறையா என்றும் தவறு என்பது ஒருமுறை நிகழ்வது தான்., மீண்டும் மீண்டும் நடப்பது என்பது, நிர்வாகச் சீர்கேட்டால் நடந்த கொலை என்று சொன்னால் கூட அது மிகையாகாது என்று கூறியுள்ளார்.
பச்சிளம் பிள்ளையை இழந்து வாடும் அந்த பெற்றோருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பொம்மை முதல்வர் என்று கேட்டுள்ளார். "தெரியாம நடந்து போச்சு மா... SORRY" என்று சொல்வாரா என்றும் இன்னும் எத்தனை முறை இதையே நாம் கேட்க வேண்டும் எனவும் கேட்டு உள்ளார்.
இதையும் படிங்க: கழிவறை முதல் காவாங்கரை வரை கலைஞர் பெயர்... MGRஐ மறைக்க முயற்சிக்கும் திமுக... அதிமுக கண்டனம்...!
உயிரிழந்த சிறுவன் ரோகித்தின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் போதுமானது இல்லை என்றும் கூறினார். எவ்வளவு கொடுத்தாலும் குழந்தையின் இழப்புக்கு ஈடாகாது எனினும், இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் போது, முழுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மக்கள் உயிர் பயத்திலேயே வாழணுமா? தமிழ்நாடு தவித்தது போதும்... இபிஎஸ் திட்டவட்டம்...!