×
 

சொத்தை பழம் போல் பட்ஜெட்...! எல்லாம் ஏமாற்று வேலை... வறுத்தெடுத்த EPS..!

இன்றைய பட்ஜெட் சொத்தைப்பழம் போல் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். இது வழக்கமான முழு பட்ஜெட் இல்லை, ஏனென்றால் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதைய அரசு குறுகிய கால செலவுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இடைக்கால வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அத்திப்பழம் வெளியில் அழகாக இருக்கும் ஆனால் உற்றுப் பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும் அதுபோலதான் இன்றைய பட்ஜெட் என்று தெரிவித்தார். திமுகவிற்கு இது கடைசி பட்ஜெட் என்று கூறியுள்ளார். விவசாயிகள், தொழிலாளிகள் என ஒட்டுமொத்த மக்களை பற்றியும் கவலைப்படாத அரசு திமுக அரசு என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஹாப்பி நியூஸ்..! வேளாண் பட்ஜெட்... இளைஞர்களை ஊக்குவிக்க மானியம்...! சட்டப்பேரவையில் அறிவிப்பு..!

வருடத்திற்கு 100 நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்று சொன்னார்கள் என்றும் ஐந்து ஆண்டுகளில் மொத்தமாகவே 140 நாட்கள் தான் நடத்தினார்கள் எனவும் குறிப்பிட்டு பேசினார். திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் வெறும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த பட்ஜெட் என்றும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். வேளாண் துறையில் நீர்வளத் துறையை சேர்த்தது ஏன் என்றும் வேளாண் பட்ஜெட் ஒரு ஏமாற்று வேலை எனவும் கூறினார். 

இதையும் படிங்க: நிதி தர மறுக்கும் மத்திய அரசு..! வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு... தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share