×
 

வான்வெளியை மூடிய வளைகுடா நாடுகள்.. அடுத்தடுத்து ரத்தாகும் விமானங்கள்.. போர் பதற்றத்தால் ஸ்தம்பிக்கும் உலகம்..!

பஹ்ரைன், லெபனான், ஈராக், கத்தார் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா, ஜோர்டான், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 12 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலை நடத்தியது. ஈரானின் முக்கியமான 3 விமான தளங்களை சுக்குநூறாக்கியது. இந்த நிலையில் ஆபரேஷன் பெஷாரத் ஃபடா (Operation Besharat Fatah) பெயரில் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து 6 ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. அமெரிக்காவை நேரடியாக தாக்க முடியாத ஈரான், அந்த நாட்டுக்கு நெருக்கமாக இருக்கும் கத்தார் மீது தாக்குதல் தொடுத்தது. 

கத்தார் தலைநகர் தோஹாவில் அமைந்துள்ள அல் உதெய்த் விமான தளத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குதான் சுமார் 10,000 துருப்புகளை அமெரிக்கா நிலை நிறுத்தி இருக்கிறது.  

இது, மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க ராணுவ நிலை. அந்த பிராந்தியம் முழுவதுமான ராணுவ நடவடிக்கைகளுக்கு இது முக்கியமான மையமாக செயல்படுகிறது.  ஈரான் ஏவுகணைகளை அமெரிக்காவின் பேட்ரியாட் தடுப்பு ஏவுகணைகள் வழிமறித்து முறியடித்தன.

இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு எதிரான ஆபரேசன் ‘பெஷரத் ஃபடா’.. ஈரான் டம்மி என கலாய்க்கும் ட்ரம்ப்..!

இந்த நிலையில் அமெரிக்க தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல் மிகவும் பலவீனமானது. ஈரானின் 14 ஏவுகணைகளில், 13 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரான் அணுசக்தி நிலையங்களில் தாக்குதல் நடத்தினோம். 

இதற்கு, அமெரிக்கா மீது ஈரான் நடத்திய பதில் தாக்குதல் பலவீனமானது. அவர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். அதை மிகவும் திறம்பட எதிர்கொண்டோம். ஈரான் ஏவிய 14 ஏவுகணைகளில், 13 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஒரு ஏவுகணை விடுவிக்கப்பட்டது. அது அச்சுறுத்தல்களை ஏற்படுத்தவில்லை என்றார்.

இதனிடையே பஹ்ரைன், லெபனான், ஈராக், கத்தார் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா, ஜோர்டான், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன. இதனால், தோஹா, அபுதாபி, குவைத், துபாய் நாடுகளுக்கு செல்லும் 6 விமானங்களும், அங்கிருந்து சென்னை வரும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தாய்லாந்து நாட்டில் இருந்து தோஹா சென்ற 3 கத்தார் ஏர்லைன்ஸ் விமானங்கள் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் மறு உத்தரவு வரும் வரை அதன் விமான சேவையை ரத்து செய்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து, இன்று லண்டன், பஹ்ரைன், அபுதாபி செல்லும் விமானங்கள் அனைத்தும் தாமதமாக இயக்கப்படும். பயணிகள் தங்களது பயண நேரத்தை திட்டமிடுவதற்கு முன்பாக, விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: மூக்கறுபட்ட ட்ரம்ப்!! இஸ்ரேலுடன் போர் நிறுத்தமா? அமெரிக்க அதிபரை அசால்ட்டாக தட்டிவிட்ட ஈரான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share