ரூ. 24,000 கோடிக்கு யுரேனியம் டீல்! கனடாவுடன் இந்தியா கைகோர்ப்பு!! அரிய வகை கனிமங்கள் துறையிலும் ஒத்துழைப்பு!!
இந்தியா - கனடா இடையே வரலாற்று சிறப்புமிக்க வகையில், அரிய வகை கனிமங்கள் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
இந்தியா-கனடா உறவுகள் புதிய உயரத்தை எட்டியுள்ளன. கனடா பிரதமர் மார்க் கார்னி நான்கு நாள் அரசுமுறை பயணமாக பிப்ரவரி 27ஆம் தேதி இந்தியாவுக்கு வந்தார். மும்பையில் தரையிறங்கிய அவர் தொழிலதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இரு தலைவர்கள் முன்னிலையில் பல வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
மிக முக்கியமானது அணு மின் உற்பத்திக்கான யுரேனியம் வழங்கும் ஒப்பந்தம். கனடாவின் கேம்கோ நிறுவனம் இந்தியாவின் அணு ஆற்றல் துறைக்கு 2027 முதல் 2035 வரை சுமார் 11,000 டன் (22 மில்லியன் பவுண்ட்) யுரேனியம் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இதையும் படிங்க: 1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்! தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிஷம்!
இதன் மொத்த மதிப்பு சுமார் 2.6 பில்லியன் கனடியன் டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக 24,000 கோடி ரூபாய்). இதனால் இந்தியாவின் அணு உலைகளுக்கு யுரேனியம் தட்டுப்பாடு ஏற்படாது. ஆக்கப்பூர்வ அணு சக்தி திட்டங்கள் விரைவுபடுத்தப்படும். சிறிய மாடுலர் ரியாக்டர்கள் (Small Modular Reactors) மற்றும் மேம்பட்ட அணு உலைகள் அமைப்பதில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற உள்ளன.
அரிய வகை கனிமங்கள் (Critical Minerals) துறையில் கூட்டுறவு ஒப்பந்தமும் கையெழுத்தானது. லித்தியம், கோபால்ட், ரேர் எர்த் போன்றவை மின் வாகனங்கள், பேட்டரிகள், மேம்பட்ட உற்பத்தி துறைகளுக்கு அவசியம். கனடா இவற்றை நம்பகமான வழங்குநராக இருக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், சூரிய சக்தி, எல்என்ஜி, எரிசக்தி சேமிப்பு துறைகளில் ஒத்துழைப்பு விரிவடையும்.
ஏஐ (செயற்கை நுண்ணறிவு), குவான்டம் கம்ப்யூட்டிங், சூப்பர் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர்கள் உற்பத்தி துறைகளில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் முதலீடு திட்டமிடப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் இளம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இணைக்கும் திட்டமும் உள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 50 பில்லியன் டாலராக (தோராயமாக 4.50 லட்சம் கோடி ரூபாய்) உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் (CEPA) இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கூறுகையில், "இது வெறும் ஒப்பந்தங்கள் அல்ல, நீண்ட கால நட்புறவு. கனடா நம்பகமான கூட்டாளி. ஏஐ மாநாட்டுக்கு பங்களித்ததற்கு நன்றி" என்றார். கார்னி, "இரு நாடுகளும் புதிய காலகட்டத்திற்கு நுழைந்துள்ளன. நம்பிக்கை அடிப்படையில் வலுவான உறவு" என்றார்.
கடந்த கால தூதரக பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளி, பொருளாதாரம், தொழில்நுட்பம், சுத்த எரிசக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளனர். இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை பெருக்கும். உலக அளவில் சுத்த எரிசக்தி மாற்றத்திற்கு பெரும் பங்களிப்பாக அமையும்.
இதையும் படிங்க: வரிப்பணத்தில் அருட்கொடையா? இப்படி ஒரு அரசியல் பிழைப்பு... வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர் வளர்மதி..!