×
 

உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஈரானு அணு சக்தியை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டி வந்த இஸ்ரேல் கடந்த 5 நாட்களாக தொடர் தாக்குதலில் இறங்கியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள், கச்சா எண்ணெய் கிடங்குகள், ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு பதிலடி தரும் வகையில் ஈரானும் நூற்றுக்கணக்கில் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 

இதனால் இஸ்ரேல் மற்றும் தெஹ்ரானில் இருந்து மக்கள் வெளியேறத் தொடங்கி வருகின்றனர். இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானியர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை உலக அரங்கை அதிர வைத்துள்ளது. ட்ரம்ப் நேற்று கனடாவில் உச்சி மாநாட்டின் குழுவை சந்தித்தார். அப்போது, அணு ஆயுத வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்ததாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நான் கையெழுத்திடச் சொன்ன 'ஒப்பந்தத்தில்' ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். என்ன ஒரு அவமானம், மனித வாழ்க்கை வீணாகிறது. நான் மீண்டும், மீண்டும் சொல்கிறேன், இனி ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது. அனைவரும் உடனடியாக தெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும்!” எனக்கூறியுள்ளார். 

ஈரானின் அரசு ஒளிபரப்புத் தலைமையகம் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சில மணி நேரங்களுக்குப் பிறகு டிரம்ப் இப்படியான கருத்துக்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதற்கிடையில், ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ஈரானின் மிகப்பெரிய யுரேனியம் செறிவூட்டல் நிலையத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன் ; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share