சிக்கியது புது ஆதாரம்.. பாகிஸ்தானை தோலுரிக்க தயாராகும் இந்தியா.. பயங்கரவாதிகளின் அடிமடிக்கு வேட்டு..
பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக, இந்தியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த சூழலில் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் அடுத்தடுத்த அறிக்கைகளால், பாகிஸ்தானுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தான் இந்த கொடிய தாக்குதலை நடத்தினர். இந்த அமைப்பு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பண உதவி அளித்து வருவதாக இந்தியா குற்றம் சாட்டியது. ஆபரேசன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளின் முகாம்களை தரைமட்டம் ஆக்கியது.
இந்த நிலையில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவிய உள்ளூர் பயங்கரவாதிகள் தொடர்பாக என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே பொருளாதாரத்தில் சரிவை சந்தித்த பாகிஸ்தான், இந்தியா நடத்திய தாக்குதலில் மோசமான பாதிப்பை அடைந்தது. இந்த நிலையில் உலக நாடுகளிடம் கையேந்தி வருகிறது.
சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை தடுக்க, சர்வதேச நாடுகளுக்கு இடையே எப்.ஏ.டி.எப் (FATF) எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு வெளியிடும் கருப்பு பட்டியலில் இடம்பெறும் நாடுகள், உலக வங்கி உட்பட சர்வதேச அமைப்புகளிடம் இருந்து நிதியுதவி பெறுவது கடினம். ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு இந்த அமைப்பு கண்டனம் தெரிவித்தது.
இதையும் படிங்க: இந்தியாவின் மிகப்பெரிய சொத்தே இவருதான்! மோடியை புகழ்ந்து தள்ளும் சசிதரூர்.. கடுப்பில் ராகுல்காந்தி..!
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் ஆதரவின்றி இந்த செயலை பயங்கரவாதிகள் அரங்கேற்றி இருக்கமாட்டார்கள் என குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், நிதி நடவடிக்கை பணிக்குழு சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2020ல், இந்திய கடற்பரப்பில் அத்துமீறி சென்ற கப்பலை இந்திய கடற்படையினர் மடக்கி பிடித்து சோதனையிட்டனர்.
இதில், ஏவுகணைகளை தயாரிக்கும் உபகரணங்கள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இந்த கப்பல் பாகிஸ்தானுக்கு செல்ல இருப்பதையும் கண்டறிந்தனர். இது, சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என, குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக, இந்தியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த சூழலில் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் அடுத்தடுத்த அறிக்கைகளால், பாகிஸ்தானுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் சர்வதேச நிதி ஆதாரங்களுக்கு தடைவிதிக்கும் நோக்கில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. பயங்கரவாதிகளை ஊக்குவித்து, அதற்கு நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளை, தகுந்த ஆதாரங்களுடன் படம் போட்டு காட்ட, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 3 பேருக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 உள்ளூர்வாசிகளை என்ஐஏ கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருத்தர் பர்வைஸ் அகமது ஜோதர்; இன்னொருத்தர் பஷீர் அகமது ஜோதர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், பஹல்காம் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானியர்கள்தான் தான் என்பதை மீண்டும் உறுதி செய்து இருக்கின்றனர் என்ஐஏ அதிகாரிகள்.
3 பயங்கரவாதிகளும் இந்தியாவுக்குள் ஊடுறுவி வருவதற்கும், பஹல்காமில் நடமாடுவதற்கும், தாக்குதல் நடத்துவதற்கும் போக்குவரத்து, உணவு, இருப்பிடம் முதலான உதவிகளை கைதான 2 பேரும் செய்து கொடுத்திருக்கின்றனர். அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் உள்ள மற்ற தொடர்புகள் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. அதற்கு பிறகு நடந்திருக்கும் இந்த கைது நடவடிக்கை பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. கைதானவர்களிடம் கிடைக்கும் தகவல்களுக்கு பிறகு மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இதையும் படிங்க: இந்தியா - பாக்., போரை நான் நிறுத்தவில்லை.. பிரதமர் மோடி காட்டிய அதிரடியால் கப்சிப் ஆன ட்ரம்ப்..!