தேசியமொழி எது? ஸ்பெயினில் கனிமொழி Thug ரிப்ளை.. இப்படி சொல்லுவாங்கனு எதிர்பார்க்கலைல..!
ஆளுங்கட்சியுடன் கருத்து மோதல், சூடான விவாதங்கள் இருந்தாலும் நாட்டிற்காக ஒன்றாக நிற்போம் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது.
ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ஆனால், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை ஏவுகணை பாதுகாப்பு கவச வாகனம் மூலம் இந்தியா முறியடித்தது.
இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது.
இதையும் படிங்க: இனியும் சீனா, துருக்கியிடம் பிச்சை எடுக்க முடியாது..! ராணுவ வீரர்களிடம் பொங்கி தள்ளிய பாக். பிரதமர்..!
இந்த நிலையில் பாகிஸ்தான் ஆதரிக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைப்பதற்காக நம் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு ஸ்பெயினுக்கு சென்றது. பாகிஸ்தானின் பயங்கரவாதம் குறித்தும், பயங்கரவாதத்துக்கு எதிரான ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றியும் கனிமொழி அந்தநாட்டின் பிரதிநிதிகளிடம் கூறினார்.
அதுமட்டுமின்றி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் புலம்பெயர் இந்தியர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்த வேளையில், இந்தியாவின் தேசிய மொழி எது?' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. நம் நாட்டுக்கு தேசியமொழி என்பது கிடையாது. இருப்பினும் ஒருதரப்பினர் தேசிய மொழி என்பது இந்தி என்று நம்பி வருகின்றனர். இப்படியான சூழலில் தான் கனிமொழி எம்பியிடம் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு கனிமொழி எம்பி, இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையிலும் ஒற்றுமையாக இருப்பது தான். இதுதான் உலகிற்கு இந்த குழு தரும் செய்தி. இதுவே இன்றைக்கு மிக முக்கியமான விஷயம் என்றார். கனிமொழியின் இந்த பதிலால் அரங்கமே கை தட்டல்களால் நிறைந்தந்து.
கைதட்டல்கள் அடங்கவே நிமிடங்கள் ஆனது. பாகிஸ்தான் பயங்கரவாதம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி ஸ்பெயின் பிரதிநிதிகளிடம் கனிமொழி எம்பி எடுத்து கூற சென்றார். மேலும் ஆளுங்கட்சியுடன் கருத்து மோதல், சூடான விவாதங்கள் இருந்தாலும் நாட்டிற்காக ஒன்றாக நிற்போம்.
பல்வேறு நாடுகளுக்கு பயணித்து இந்தியாவின் குரலாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து எடுத்துரைத்தோம். ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல நாடுகளில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன. பயங்கரவாத தாக்குதலால் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தோம் எனவும் கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதான் மன்னிப்பு கேட்டுட்டாங்களே! சட்டக்கல்லூரி மாணவிக்கு வக்காலத்து வாங்கும் பவன், கங்கனா..!