×
 

பேரழிவு காத்திருக்கிறது... அமெரிக்கர்களுக்கு அதிரடி எச்சரிக்கை... அலறித்துடிக்கும் இஸ்ரேலியர்கள்...!

இஸ்ரேல் மீதான தண்டனை தொடரும் என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஈரானில் நடைபெற்று வரும் இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 950 பேர் கொல்லப்பட்டதாக வாஷிங்டனை மையமாக கொண்ட மனித உரிமைகள் ஆர்வளர்கள் குழு தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் 3,450 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 380 பொதுமக்கள் மற்றும் 253 பாதுகாப்பு படை வீரர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்ததுறை அறிவுறுத்தி உள்ளது. 

இஸ்ரேல் ஈரான் மோதல் காரணமாக மத்தியக்கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவும் சூழலில் அமெரிக்க குடிமக்களுக்கு உலகளாவிய எச்சரிக்கையை அந்நாட்டு வெளியுறவு துறை விடுத்துள்ளது. அமெரிக்கர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்த வாய்ப்புள்ளதாகவும், எனவே பயண ஆலோசனை பாதுகாப்பு எச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுடனான மோதல் முன்கூட்டியே முடிவுக்கு வராது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அணு ஆயுதங்களை அழிப்பதே தங்கள் இலக்கு என்றும் நோக்கங்கள் நிறைவேறாமல் மோதலை முடித்து விட மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகனைகள் மற்றும் அணுசக்தி திட்டமாகிய இரட்டை அச்சுறுத்தல்களை அகற்றும் தனது இலக்குகளை அடையும் நடவடிக்கையில் இஸ்ரேல் நெருங்கி விட்டதாகவும் நெதன்யாகு தெரிவித்தார். இஸ்ரேல் மீதான தண்டனை தொடரும் என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதையும் படிங்க: தொடரும் இஸ்ரேல் - ஈரான் போர்.. தமிழர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!

இதனிடையே அமெரிக்க தாக்குதல்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் நேரம், தன்மை மற்றும் அளவை ஈரானை முடிவு செய்யும் என்றும் ஐனாவுக்கான ஈரான் தூதர் இரவாணி தெரிவித்துள்ளார். இதனிடையே இஸ்ரேலின் டெல் அவிப் நகரில் ஈரானிய ஏவுகணை தாக்குதல்கள் தொடர்வதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் வகையில் எச்சரிக்கை சைரன்கல் ஒலிக்கப்பட்டன.

ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய சூழலில் ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான சாத்திய கூறு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பி உள்ளார். ஈரானில் அமெரிக்க தாக்குதல்களால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ட்ரம்ப் ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதுஅல்ல. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால் அங்கு ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

 ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்துவர அடுத்த சில நாட்களில் மேலும் இரண்டு அல்லது மூன்று விமானங்கள் அனுப்பப்படும் என வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஈரான் மோதல் காரணமாக ஈரானில் தங்கியுள்ள இந்தியர்களை ஆபரேஷன் சிந்து திட்டத்தின் கீழ் மத்திய அரசு தொடர்ந்து மீட்டு வருகிறது. அந்த வகையில் ஈரான் மஷாத் நகரிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பிய மேலும் 285 இந்தியர்களை விமான நிலயத்தில் வெளியுறவு துறை இணையமைச்சர் பவித்ரா மார்கரேட்டா வரவேற்றார். பின்னர் செய்தியாளரிடம் பேசியவர் ஈரானிலிருந்து இந்தியர்களை மீட்க அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் கூடுதலாக மூன்று மீட்பு விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த 'கொமெனி'!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share