உச்சக்கட்ட பதற்றம்... ஈரானின் முக்கிய தலைவர் மரணம் - தட்டித்தூக்கிய இஸ்ரேல்...!
இந்த போர் தொடங்கியதிலிருந்து ஈரான் நாட்டின் முக்கிய உச்சபட்ச ராணுவ தளபதிகள் தொடர்ந்து உயிரழந்து வருகிறார்கள்.
ஈரான் இஸ்ரேல் இடையான போர் இரண்டாவது வாரமாக நீடித்து வரக்கூடிய சூழ்நிலையில், ஈரான் ட்ரோன்களும் இஸ்ரேலின் விமானங்களும் மாறி மாறி குண்டுமலையை பொழிந்து கொண்டிருக்கின்றன. இன்றும் இஸ்ரேலின் குண்டுவீச்சில் ஈரான் ஆதரவு குத்ஸ் அமைப்பின் தளபதி சயித் இசாசி உயிரிழந்திருக்கிறார். இவர்தான் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலில் தாக்கியதில் முக்கிய பங்காற்றியவர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த போர் தொடங்கியதிலிருந்து ஈரான் நாட்டின் முக்கிய உச்சபட்ச ராணுவ தளபதிகள் தொடர்ந்து உயிரழந்து வருகிறார்கள்.
முதலில் இஸ்ரேல் தாக்குதலில் மெஹமூத் பகேரி, தாவூத் சேகியான் மற்றும் முகமது பகை தகர்பூர், மன்சூர் சர்கூர், மசூத் மற்றும் ஹஸ்மானி ஜாவத் உள்ளிட்ட முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட அலி சத்மானியும் மூன்று நாட்களுக்கு முன்பு இஸ்ரேலின் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார். இப்போது இரான் ஆதரவு குத் தளபதியான அந்த கமாண்டர் ஜயித் இசாதி கொல்லப்பட்டிருக்கிறார். இதேபோல ஏற்கனவே இந்த குண்டுவேச்சில் குஸ் தளபதிகளில் மற்றொரு மிக முக்கியமான கமாண்டரும் இன்றைய குண்டு வீசி கொல்லப்பட்டிருக்கிறார்.
இன்று ஒரே நாளில் இரண்டு முக்கிய ராணுவ தளபதிகள் இரான் ஆதரவு குஸ் அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த குத் அமைப்புதான் இரான் ராணுவத்திற்கும் மற்றும் ஹமாஸ் உள்ளிட்ட அமைப்பிற்கும் உடைய முக்கிய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தவர்கள். இந்த இரான் ஆதரவு குத்ஸ் தளபதி சையித் கமாண்டர் சையிது இசாதி அவர் இன்று குண்டுவீச்சில் பலியாகி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!
மற்றொரு மிக முக்கியமான தகவல் இரானின் ட்ரோன் தாக்குதலில் இன்று இஸ்ரேலின் முக்கிய நகரம் ஒன்று பலத்த சேதமடைந்திருக்கிறது. பெகான்சிய என்ற இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரத்தின் மீது இரான் இன்று ட்ரோன் தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலின் டெல்லவியூவ் நகரில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் பல்வேறு முக்கிய கட்டடிடங்களில் இரான் பாலிஸ்டிக் ஏவுகனை மற்றும் ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியிருந்த சூழ்நிலையில் இன்றும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: மாறி மாறி அடித்துக்கொள்ளும் ஈரான்-இஸ்ரேல்.. இந்தியாவில் எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை..!