×
 

மாறி மாறி அடித்துக்கொள்ளும் ஈரான்-இஸ்ரேல்.. இந்தியாவில் எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை..!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், தற்போது ஒரு பேரலுக்கு 77 டாலராக இருக்கும் கச்சா எண்ணெய் விலை 130 டாலர் வரை உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானங்கள், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளன. அணுசக்தி திட்ட மையங்கள் மற்றும் ஈரான் ராணுவ தளங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.  

இந்த தாக்குதல் பற்றி கூறியுள்ள இஸ்ரேல் ராணுவம், முன் எப்போதையும் விட இன்று, ஈரான் அணு ஆயுதங்கள் பெறுவதற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்கள் ஈரான் கையில் இருப்பது, இஸ்ரேலுக்கும் இந்த உலகுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். 

குடிமக்களை பாதுகாக்க வேண்டிய கடமையை நிறைவேற்றுவதை தவிர இஸ்ரேல் அரசுக்கு வேறு வழியில்லை கடந்த காலத்தில் செய்தது போல, அனைத்து இடங்களிலும் அதன் கடமையை செய்யும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. ஈரானில், அணுசக்தி செறிவூட்டல் திட்டம், அணு ஆயுதமயமாக்கல் திட்டம், பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களின் மையத்தை குறி வைத்து தாக்கினோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: நாடு பத்தி எரியுறப்போ கல்யாணமா? மகனின் திருமணத்தை ஒத்திவைத்த நெதன்யாகு..!

இஸ்ரேலின் உயிர்வாழ்விற்காகவும், ஈரானிய அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்கத்துடனும், ‘ஆபரேஷன் ரைசிங் லையன்’ Operation Rising Lion ராணுவ நடவடிக்கையை தொடங்கி உள்ளோம். இந்த அச்சத்தை நீக்க இந்த ஆபரேஷன் எத்தனை நாட்கள் ஆனாலும் தொடரும் என்று நெதன்யாஹு எச்சரித்துள்ளார்.

மேலும், இஸ்ரேலின் தாக்குதலுக்கு வருந்தத்தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்தது. ஈரான் எப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது ட்ரோன்களை ஏவியது ஈரான். ஈரானிய நீர்மூழ்கிக் கப்பல் இஸ்ரேலிய பிரதேசங்களை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. மேலும் பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேலின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக ஜெருசலேம், டெல் அவிவ் போன்ற நகரங்களில் நடந்த தாக்குதலில் பெரும் சேதம் விளைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானும் இஸ்ரேலும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியாவிற்கு ஈரான் மட்டுமின்றி மற்ற அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் பெறுவதில் சிக்கல் இருக்கும். தற்போது ஒரு பேரலுக்கு 77 டாலராக இருக்கும் கச்சா எண்ணெய் விலை 130 டாலர் வரை உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் விலை கடுமையாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்தியா இப்போதே அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கி உள்ளது.

ஒருவேளை அரபு நாடுகளில் இருந்து சிக்கல் ஏற்பட்டால் ரஷியாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உற்பத்தியை பாதிக்கும். விலையும் தாறுமாறாக உயரும். இதன் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் சூழல் உருவாகும்.

இதையும் படிங்க: ட்ரம்ப்தான் டார்கெட்.. ஈரானின் மாஸ்டர் ப்ளான்.. நெதன்யாகு பேச்சால் பற்றி எரியும் சர்ச்சை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share